அல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது?

நான் சிறுவனாக இருந்த போது கொண்டாடிய பக்ரீத் பண்டிகைகள் இன்னும் ஞாபகத்தில் பசுமையாக இருக்கிறது. பக்ரீத் பண்டிகையின் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அப்பா ஒரு ஆட்டை வாங்கிவிடுவார். அந்த ஆட்டுக்கு தேவையான புல்லை நான் அதற்கு உண்ணக்கொடுப்பேன். பக்ரீத் பண்டிகையன்று, மசூதிக்குச் சென்று தொழுதுவிட்டு, வீடு திரும்பிவோம். ஆட்டை அறுப்பதற்கும், அதன் தோலை உரித்து கறி வெட்டுவதற்கும் ஆட்களை அப்பா அழைத்து வருவார்.

ஆடு அறுக்கப்படும் போது அதனை பார்க்கவேண்டாம் என்று பெரியவர்கள் எங்களை தடுப்பார்கள். ஆட்டு இறைச்சி மூன்று சம பகுதிகளாக பிரிக்கப்படும். ஒரு பங்கு சொந்தக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கப்படும். இன்னொரு பங்கு ஏழை முஸ்லிம்களுக்கு. மூன்றாவது பங்கு எங்களுக்கு. நான்கு கறித்துண்டுகளை சின்ன பொட்டலங்களாக கட்டி, எங்கள் பகுதியில் இருக்கும் இதர முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று கொடுத்துவருவோம். அடுத்த சில நாட்கள் எங்கள் வீட்டில் அசைவ சமையல் தான், காயவைத்த கபாப் வாசனை வீடு முழுக்க வீசும். இந்த நேரத்தில் அசைவ உணவை சாப்பிடாதவர்கள் வீட்டிற்கு வந்தால் அவ்வளவு தான் அவர்களின் கதை.  மாடியில் காயவைத்த கபாப் தூண்டுகளை மாலையில் கொண்டு வந்து பத்திரப்படுத்துவோம், மறுநாள் காலை மறுபடியும் காயவைப்போம். அடுத்த சில வாரங்கள், உணவு பறிமாறப்படும் போது, கபாப் துண்டுகள்,  அதிகமாக எங்கள் சாப்பாட்டில் காணப்படும்.

பக்ரீத் பண்டிகை

சரி விஷயத்துக்கு வருகிறேன். இன்னும் பத்து நாட்களில் பக்ரீத் பண்டிகை வருகிறது. பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி முஸ்லிம்களோடு உரையாடலாம் என்று விரும்பி இந்த சிறிய தொடர் கட்டுரைகளை எழுதுகிறேன். இவைகள் பற்றி முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைக்கலாம்.

கருப்பொருள்: கிறிஸ்தவம் பற்றி முஸ்லிம்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் மிகவும் முக்கியமானவைகள் இவைகள் தான்:

அ) ஒருவரின் சுமையை (பாவங்களை) இன்னொருவர் சுமக்கமுடியாது.

ஆ) உலக மக்களின் பாவங்கள் அனைத்தையும், இயேசுவின் மீது சுமத்தி, அவரை தண்டிப்பது என்பது அநியாயமாகும், இதனை இறைவன் ஒருபோதும் செய்யமாட்டான்.

இ) செய்யாத குற்றத்திற்காக ஒருவரை தண்டிப்பது தவறானதாகும்.

ஈ) இறைவன் பாவங்களை மன்னிக்கவேண்டுமென்றால், அவன் ஒரு வார்த்தையில் மன்னித்துவிடலாம். மனிதர்களை மன்னிக்க இறைவனுக்கு பலிகள் பரிகாரங்கள் தேவையில்லை. ஒரு குற்றவாளியின் குற்றத்தை எடுத்து நிரபராதியின் மீது சுமத்தி, அந்த குற்றவாளியை தண்டிக்காமல் இருப்பதும்,  ஆனால், அந்த நிரபராதியை தண்டிப்பதும்  அநீதி இல்லையா?

இப்படிப்பட்ட பல கேள்விகளை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்பார்கள். இக்கேள்விகள் நியாயமானவைகளாக தெரிகின்றதல்லவா! குர்-ஆனும், ஹதீஸ்களும் இவைகள் பற்றி என்ன சொல்கின்றன என்பதை ஆய்வு செய்வது இத்தொடர் கட்டுரைகளின் நோக்கம் ஆகும்.  இந்த தற்போதைய கட்டுரையில் குர்-ஆனில் காணப்படும் பக்ரீத் பண்டிகை (ஈத் அல்-அதா) சம்மந்தப்பட்ட சில வசனங்களை மட்டும் ஆய்வு செய்து, சில கேள்விகளை முன்வைப்போம்.

இப்ராஹீம் தம் மகனை பலியிட முயன்ற நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பைபிளில் ஆதியாகமம் 22ம் அத்தியாயத்தில் இதனை காணலாம். குர்-ஆன் 37ம் அத்தியாயத்திலிருந்து சில வசனங்களை படிப்போம்.

குர்-ஆன் 37:102-107

37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” 37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது.

37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.

37:105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

37:106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”

37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப்பகரமாக்கினோம்.(முஹம்மது ஜான் தமிழாக்கம்).

(ஆபிரகாம் பலியிட முன்வந்தது, ஈசாக்கையா, இஸ்மவேலையா என்பதைப் பற்றி இக்கட்டுரையில் ஆராயத்தேவையில்லை, பின் குறிப்பில்  கொடுக்கப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்).

அல்லாஹ்விற்கு ஏன் பலியும் இரத்தமும் தேவைப்பட்டது?

மேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள். இப்ராஹீமின் தியாகத்தை, அல்லாஹ் மெச்சிக்கொள்கிறான். ஆனால், அதோடு நின்று விடாமல், ஒரு ஆட்டை ஆபிரகாமுக்கு காட்டி, அதை பலியிட சொல்கின்றான். குர்-ஆன் 37:107ம் வசனத்தை கவனியுங்கள், “நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்”.   இந்த வசனத்தை மட்டும், இதர தமிழாக்கங்களிலும், ஆங்கிலத்திலும் பார்த்துவிட்டு, நம் கேள்விகளுக்குச் செல்வோம்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

37:107. ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

37:107. மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம்விடுவித்துக் கொண்டோம்.

பிஜே தமிழாக்கம்:

37: 107. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.

Yusuf Ali: And We ransomed him with a momentous sacrifice:

Khalifa: We ransomed (Ismail) by substituting an animal sacrifice.

Palmer: And we ransomed him with a mighty victim;

இந்த வசனத்தை பார்க்கும் போது, கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன:

1) ஆபிரகாமின் மகன் கொல்லப்படுவதற்கு முன்பு அல்லாஹ் அவனை காப்பாற்றிவிட்டான், இது நல்லது தான். ஆனால், பலியிட  குறிக்கப்பட்ட ஆபிரகாமின் மகனுக்கு பதிலாக ஒரு பலியை அல்லாஹ் ஏன் தயார் படுத்தவேண்டும்?

2) கொல்லப்படவேண்டியவனுக்கு பதிலாக, அந்த இடத்தில் ஏன் ஒரு ஆடு கொல்லப்படவேண்டும்?

3) அல்லாஹ் ஆபிரகாமை மெச்சிக்கொண்டுவிட்ட பிறகு, அவர்களை அப்படியே வீட்டிற்கு அனுப்பியிருக்கவேண்டியது தானே! ஏன் அந்த இடத்தில் ஒரு மிருகம் கொல்லப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான்?

4) அல்லாஹ் ஆபிரகாமின் மகனை காப்பாற்றுவதை முன்னமே திட்டமிட்டிருந்தான், அங்கு ஒரு ஆட்டை தயார் படுத்தி வைத்திருந்தது ஏன்? ஒரு ஆட்டின் பலி வேண்டும் என்று ஏன் அல்லாஹ் விரும்பினான்?

ஆபிரகாமின் மகனை விடுவிக்கவேண்டியது ஏன்?(Ransom)

போரில் பிடிப்பட்ட அடிமைகளை விடுவிப்பதற்காக, “மீட்பு பணம் அல்லது பிணைப்பணம்” என்றுச் சொல்லக்கூடிய பணத்தை கொடுத்து, அடிமைகளை விடுவிப்பார்கள். அது போல, ஒரு மகத்தான பலியைக் கொண்டு நாம் விடுவித்தோம் என்று அல்லாஹ் சொல்வது ஏன்?

1) IFT தமிழாக்கத்தில் “ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம்.” என்று விவரமாக விளக்கப்பட்டுள்ளது.

2) ஆபிரகாமின் மகன் எப்போது அடிமையானான்? யாருக்கு அடிமையானான்?

3) அவனை யாரிடமிருந்து ஆபிரகாம் விடுவித்தான்?

4) ஒருவேளை அல்லாஹ் மீட்பு பணம் (ஆடு) கொடுத்து விடுவித்தான் என்றுச் சொன்னால், யாரிடமிருந்து அல்லாஹ் விடுவித்தான்? அல்லாஹ்வை விட பெரியவன் யார் இருக்கின்றார்கள்? தனக்குத் தானே மீட்பு பலியைக் கொடுத்துக்கொண்டு, அக்குழந்தையை அல்லாஹ் மீட்டானா? இதனை எப்படி புரிந்துக்கொள்வது?

5) இரத்தம் சிந்தாமல் ஒருவர் மீட்கப்படமுடியாதா?

6) ஒருவரின் பாரம் ஒருவர் சுமக்கமுடியாது என்றுச் சொன்னால், ஏன் அந்த ஆடு அநியாயமாக ஆபிரகாமின் மகனுக்காக கொல்லப்படவேண்டும்? ஆடு நிரபராதி தானே! யாரோ ஒருவரை மீட்க இந்த ஆடு ஏன் சாகவேண்டும்?

7) ஆபிரகாமே, உன் தியாகத்தை நான் பார்த்துவிட்டேன், குழந்தையை கொல்லாதே, சந்தோஷமாக வீட்டுக்குப்போ என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஏன் அல்லாஹ் ஒரு மகத்தான பலியை அங்கு கொடுத்தான்?

8) ஒருவேளை, பலியில்லாமல் விடுதலை கிடைக்காது, இரத்தம் சிந்தப்படாமல் மன்னிப்பு இல்லை, தண்டனையிலிருந்து விடுதலை இல்லை என்பதைச் சொல்லவேண்டி, அல்லாஹ் இப்படி ஆட்டை பலியிடச் சொன்னானா?

முஸ்லிம்களே, குர்-ஆனில் ஒருவரின் பாரத்தை ஒருவர் சுமக்கமுடியாது என்றுச் சொல்லும் 6:164, 17:13-15 போன்ற வசனங்கள் உண்டு என்று எனக்கு எடுத்துக் காட்டாதீர்கள்! அவைகள் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், குர்-ஆன் 37:107ல், ஏன் அல்லாஹ் ஒரு ஆட்டை பலியிட அனுமதித்தான்? அதன் பின்னனி என்ன? இப்படி பலியிட்டு இரத்தம் சிந்துவதினால் அவனுக்கு (அல்லாஹ்விற்கு) என்ன நன்மை? அல்லது ஆபிரகாமின் மகனுக்கு என்ன லாபம்? என்பதை மட்டுமே விளக்குங்கள்.

அல்லாஹ் ஆபிரகாமுக்கு மகனை பலியிடும்படி கனவை கொடுத்தான், அவனே அதனை தடுத்தும்விட்டான், அவ்வளவு தான். இந்த இடத்தில் பலி எங்கே வந்தது? “மீட்புப்பணம்”(Ransom) ஏன் வந்தது? ஏன் இரத்தம் சிந்தப்படவேண்டும்?

ஆபிரகாம் கத்தியை ஓங்கிவிட்டார், எனவே அதற்கு இரத்தத்தை காட்டாமல் கீழே வைக்கக்கூடாது என்று சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். தமிழ் படங்களில் ஹீரோ “நான் மேலே எடுத்த கத்திக்கு இரத்தத்தை காட்டாமல் கீழே வைக்கமாட்டேன்” என்றுச் சொல்வது போல, பஞ்ச் வசனம் சொல்லவேண்டாம். இது மிகவும் முக்கியமான விஷயம், எந்த ஒரு காரணமும் இல்லாமல், அல்லாஹ் பலிக்காக ஆட்டை கொடுத்து, ஆபிரகாமின் மகனை நான் மீட்டுக்கொண்டேன் என்று சொல்லமாட்டான்.

ஆட்டை அறுக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, ஆபிரகாம் சுயமாக செய்தார் என்று சொல்லவருகிறீர்களா? குர்-ஆன் 37:107ம் வசனத்தை நன்றாக படியுங்கள், அல்லாஹ் சுயமாகவே பலிக்காக ஒரு ஆட்டை கொடுத்தானாம், அதுவும் அது மகத்தான ஒரு பலியாம்!

முஸ்லிம்களில் சிலர், அந்த ஆடு, அல்லாஹ்வின் சொர்க்கத்தில் பல (40) ஆண்டுகள் மேய்ந்த ஆடு என்றும், அதனைத் தான் அக்குழந்தையை மீட்க அல்லாஹ் கொடுத்தான் என்றும் சொல்வார்கள். அது சொர்க்கத்தின் ஆடோ, பூமியின் ஆடோ! அது பிரச்சனை அல்ல!  கேள்வி என்னவென்றால், ஏன் அந்த ஆடு மரிக்கவேண்டும்? ஏன் அதன் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்பது தான்?

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பும் முஸ்லிம்கள், குர்-ஆன் 37:107ம் வசனத்தை ஆய்வு செய்து பதில் சொல்லுங்கள்.

அடுத்த தொடரில் சந்திக்கிறேன்…

அடிக்குறிப்புக்கள் (பயனுள்ள கட்டுரைகள்):

(நன்றி ஈஸா குர்ஆன்)

இறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா?

 

இஸ்லாமிய மரபு மொழிபெயர்ப்பு

 

இஸ்லாமும் கிறிஸ்தவம் போன்றே ஒரு உலக மதமாகும். அனைவரையும் முஸ்லீம்களாக மாற்றுவதே அதன் குறிக்கோளாகும்.

ஏழாம் நூற்றாண்டின் அரபு கலாச்சாரத்தின் அணுகுமுறையை இன்றும் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது இஸ்லாம். உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் அரபுமொழியில் வணக்க வழிபாடுகள் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேத நூல் அரபியில் மட்டுமே இருக்கிறது. சில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அவை கருத்தாக்கம் என்பதால் அவற்றை குர்ஆனாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

நாள் தோறும் கிறிஸ்தவம் சுதேச மக்கள் கலாச்சாரத்துக்கும் அவர்கள் மொழிக்கும் மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நித்திய இறைவனையும் அவர் படைப்புகள் பற்றிய செய்திகளையும் யூத கலாச்சரத்திலிருந்து தத்தெடுத்து, அவர்கள் சொந்த மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுகிறது.

யஹ்யா நபி சொன்ன ஷஹாதா

John 3-30

(யஹ்யா) யோவான் 3:22-36 


22 இவைகளுக்குப்பின்பு, ஈஸா அல் மஸீஹ்வும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார். 23 சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 அக்காலத்தில் யஹ்யா காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 25 அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. 26 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27 யஹ்யா பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். 28 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29 மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. 30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். 34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

பஸ்காப் பண்டிகைக்குப் பிறகு ஈஸா அல் மஸீஹ் எருசலேமைவிட்டுச் சென்று ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். மறுபிறப்புக்கு முன்பிருக்க வேண்டிய உடைந்த இருதயத்தைப் பற்றி சீஷர்கள் இப்போது அறிந்திருந்தார்கள். பாவ அறிக்கையில்லாமல் மீட்பு நடைபெறாது. ஞானஸ்நானத்தின் மூலமாக மனமுடைந்த பாவி இறைவனுடனான புதிய உடன்படிக்கைக்குள் நுழைவதற்கான தன்னுடைய ஏக்கத்தைத் தெரிவிக்கிறான் அதனால் பாவமன்னிப்புக்கென்ற ஞானஸ்நானம் உடைந்த இருதயத்தை அடையாளப்படுத்துகிறது.

யஹ்யா நபி தன்னுடைய ஊழிய இடத்தை யோர்தான் பள்ளத்தாக்கின் வடக்கு முனையிலிருந்த ஆயினோனுக்கு மாற்றி யிருந்தார். அவர்கள் யஹ்யா நபியிடம் வந்து தங்களுடைய இருதயத்தை ஊற்றினார்கள்; அவரும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, ஈஸா அல் மஸீஹ்வைச் சந்திப்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார்.

சிருஷ்டி கர்த்தாவும் அல்லாஹ்வும்


God-is-not-Allah

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்ற இவ்விரு மார்க்கங்களை பின்பற்றுபவர்கள் சொல்லும் பொதுவான ஒரு விஷயம், “வானத்தையும் பூமியையும் படைத்த இறைவனை நாங்கள் தொழுதுக்கொள்கிறோம்” என்பதாகும். இது ஒரு அடிப்படை விஷயம் என்பதால், இதனை அதிகமாக விளக்கத்தேவையில்லை. இறைவேதமாம் பைபிள் தன் முதல் வசனத்தை தேவன் வானத்தையும் பூமியையும் படைத்த வர்ணனையோடு துவங்குகிறது (ஆதியாகமம் 1:1). இன்னும் பல இடங்களில் பைபிளின் இறைவன் தம்முடைய உருவாக்கும் வல்லமையை பறைசாற்றுவதை காணமுடியும் (பார்க்க ஏசாயா 44:24 & யோபு 38:4-6). இதே போல, குர்-ஆனிலும் அனேக இடங்களில் அல்லாஹ் வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

குர்ஆன் 6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன்ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்

யாரை பின்பற்றப்போகிறீர்கள்?

follow me

முந்தைய காலங்களை விட, தற்காலத்தில் விலாசம் சரியாக தெரியாத ஊர்களுக்குச் செல்வது மிகவும் சுலபமாகும். புதிய சாதனங்களாகிய ஜிபிஎஸ் (GPS) மற்றும் கூகுள் மேப் (Google Map) போன்றவை நம்முடைய விலாசதேடலை சுலபமாக்கிவிட்டன. பழங்காலங்களில், நாம் சரியான விலாசத்தை சென்றடையவேண்டுமென்றால், அவ்வழிகளை அறிந்து வைத்திருக்கின்ற நபரின் உதவியை நாடவேண்டும்.

அதுபோல்தான் சுவனபதியை அடையவேண்டும் என்றால் அதற்கான வழியை அறிந்தவருடைய உதவியைதான் நாடவேண்டும் என்பது நான் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த கட்டுரையில் ஈஸா அல் மஸீஹ் மற்றும் முஹமது நபியவர்களுடைய வாழ்க்கையின் கடைசி நாட்களை நாம் அவதானித்து இருவரில் யார் சுவனம் செல்லும் வழியை நமக்குக் காட்ட தகுதியானவர் என்பதை ஆராய்வோம்.

இன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை

இஸ்லாமியர்கள் இன்ஜீல் என்று அழைக்கும் சுவிசேஷ கிதாபுகளில் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) ஈஸா அல் மஸீஹ் இறைவன் என்பதற்கு சான்றுகள் இல்லை என்று பகிரங்கமாக இஸ்லாமிய அறிஞர்கள் பயான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

உண்மையாக சத்தியத்தை தேடும் இஸ்லாமியர் உண்மையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த சிறிய கட்டுரையில் அவர்கள் குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை ஆராய்வோம். ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய இறைத்தன்மையை வெளிப்படுத்திய வசனங்களையும் ஆராய்வோம்.

உன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து

(முகப்புத்தகத்திலிருந்து)song of solomon

உன்னதப்பாட்டை குறித்து முன்னால் இஸ்லாமியனின் கருத்து

அல் கிதாபில் (பைபிளில்) உன்னதபாடல் என்ற ஒரு கிதாப் உள்ளது. அது ஆபாச புத்தகம் என்று நவீனகால இஸ்லாமிய அறிஞர்கள் (அவர்கள் காபிர்கள் என்று 99 வீதமான இந்திய இஸ்லாமியர் பத்வா கொடுத்துள்ளார்கள்) என்று தங்களை காட்டிக்கொள்ளும் சிலர் முகபுத்தகங்களிலும் இணையத்தளங்களிலும், விவாதங்களிலும் ஜும்மா பயான்களிலும் ஆபாசமாக பயான் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆபாசாமாக பேசினால்தான் அநேகர் விரும்பி தங்கள் பயான்களை கேட்பார்கள் என்பது அவர்கள் விரும்பமாக இருக்கிறது. அதற்கு ஆதாரமாக முஹமது நபி மூன்று சந்தர்ப்பங்களில் பொய் சொல்ல அனுமதித்தார். அதில் ஒன்று தன் மனைவியிடம் பொய் சொல்ல முஹமது நபி அனுமதி கொடுத்திருக்கிறார். ஆகவே மனைவியை பொய்யாக வர்ணித்து அவளை ஏமாற்றலாம். இரண்டாவது இருவருக்கிடையில் சண்டை நடக்கும் போது அவர்களை பொய் சொல்லி சமாதானம் செய்யலாம். மூன்றாவது போர்களத்தில் பொய் சொல்லலாம்.
மனைவியை பொய்யாக வர்ணிக்கவேண்டும் என்று இந்த அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் தூய இறைவன் தன் உம்மத்தை தனது மனைவிபோல் நேசிக்கிறவர். அதாவது அவர் தனது சமுதாயத்தை நேசிப்பது போல், ஒவ்வொருவருக்கும் தன் மனைவியை நேசிக்குமாறு கூறுகிறார். ஒரு கணவன் எப்படி தன் மனைவிக்கு பொய் சொல்லாமல் உண்மையாக அவளை நேசிக்கவேண்டும் என்பதை உன்னதபாடல் என்ற கிதாபுக்கூடாக தெளிவு படுத்துகிறார்.

இப்பொழுது அந்த அறிஞர்கள் கேட்பார்கள் “ அறையில் செய்யவேண்டிய காரியத்தை இப்படி பகிரங்கமாக பேசுவது இறைவேதமா” என்று. இப்படிச் சொல்லும் அறிஞர்கள் தங்கள் மனைவிமாரை அழைத்துச்சென்று ஆண் வைத்தியரிடம் மறைவான வியாதி ஒன்றுக்காக மருத்துவம் பார்க்கவேண்டி ஏற்பட்டால், மூன்றாவது நபர் அன்னிய ஆடவனிடம் அதைப்பற்றி பேசியும், காட்டியும்தானே ஆகவேண்டும்??
இப்பொழுது அது ஆபாசம் என்று யாராவது வர்ணித்தால் இந்த அறிஞர்கள் எப்படியான பதிலை கொடுப்பார்கள்??

இறைவனுக்கே ஆபாசம் கற்பிக்கும் இந்த அறிஞர்களை நம்பி அவர்களின் அறியாமை கருத்துக்களை ஷேர் செய்யும் வாலிபகூட்டத்தின் கண்கள் திறக்கப்பட நாம் துஆச் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

அந்த அறிஞர்கள் போர்களம் என்பதை விவாதக்களங்களாகவும் பயான் மேடைகளாகவும் தங்களுக்குவேண்டிய வியாக்கியானம் செய்துகொண்டு பொய்களையும் புறட்டுகளையும் பரப்பிக்கொண்டு தமிழ் பேசும் இஸ்லாமிய வாலிபர்களை நரகத்துக்கு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வாலிபர்களை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடுவோம். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கும் நேர்வழிகாட்ட போதுமானவர்.

ஈஸா இறைவனா?

ஈஸா இறைவனா

பொதுவாக முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு சொல்லும் போது, “ஈஸா அல் மஸீஹ்வை மனிதனாக காட்டும் புதிய ஏற்பாட்டின் சில வசனங்களை எடுத்துக் காட்டி, இவைகளின் படி ஈஸா ஒரு மனிதன் தான், அவர் இறைவன் அல்ல” என்றுச் சொல்வார்கள்.

தன் இலக்கை தவறவிட்டுவிட்ட அம்பு போன்றது தான் முஸ்லிம்களின் இந்த வாதம். இங்கு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், “ஈஸா அல் மஸீஹ் ஒரு மனிதனாகவும் இருக்கிறார்” என்று கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் என்பதாகும். கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு புதிய மற்றும் அறிய விஷயத்தை கண்டுபிடித்து சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிற விஷயத்தைத் தான் அவர்கள் சொல்கிறார்கள். மேலும், முஸ்லிம்களின் இந்த வாதத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்கள் “பைபிளிலிருந்து தங்களுக்கு தேவையான வசனங்களைத் தனிமைப்படுத்தி மேற்கோள் காட்டுகிறார்கள்” என்பதாகும். ஆனால், ஈஸா அல் மஸீஹ்வைப் பற்றி கிறிஸ்தவர்களின் புரிந்துக் கொள்ளுதல் தான் சரியானது. பைபிளில் ஈஸா அல் மஸீஹ்வைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ள அனைத்து வசனங்களையும் ஒன்று சேர்த்து கிறிஸ்தவர்கள் பார்க்கிறார்கள். முஸ்லிம்களைப் போல சில வசனங்களை விட்டுவிட்டு பொருள் கொள்வதில்லை. ஈஸா அல் மஸீஹ்வை இறைவனாக காட்டும் வசனங்களையும், மனிதனாக காட்டும் வசனங்களையும் கிறிஸ்தவர்கள் பார்ப்பதினால், அவர்களின் புரிந்துக் கொள்ளுதலில் தவறு இருப்பதில்லை. “இதோ இவ்வசனங்கள் ஈஸா அல் மஸீஹ்வை மனிதனாக காட்டுகின்றன” என்று முஸ்லிம்கள் நம்மிடம் சொல்லும் போது, அவரைப் பற்றிய இறைத்தன்மையை வெளிப்படுத்தும் இதர வசனங்களோடு அவைகள் முரண்படுவதில்லை என்பதையும் புரிந்துக் கொள்ளவேண்டும். 

இறை புத்திரனை  ஈமான் கொள்வதா?

Psalm 118-23

JOHN 3:17-21

யோவான் 3:17 – 21

17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

 

யஹ்யா நபி  தன்னுடைய தேசத்திலிருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி, மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் மஸீஹ்வை குறித்துப் பயான் செய்தார். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவிடம் பேசும்போது தான் நெருப்பினால் சுட்டெரிப் பதற்கு வராமல் இரட்சிப்பதற்காக வந்ததாகக் கூறுகிறார். நம்முடைய இரட்சகர் இரக்கமுள்ளவர். யஹ்யா நபியின் பதிலாள் பிராயச்சித்தத்தின் இரகசியத்தை அறிந்து கொண்ட போது, ஈஸா அல் மஸீஹ்வை உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டி என்று அழைத்தார்.

 

இறைவன் தம்முடைய அன்பினால் தம்முடைய குமாரன் யூதர்களுக்காக மட்டும் அனுப்பாமல், உலகத்திற்காக அனுப்பினார். 17ம் வசனத்தில் உலகம் என்ற வார்த்தை மூன்று முறை இடம்பெறுகிறது. புறவினத்து மக்களை நாய்களைப் போல நடத்திய யூதர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இறைவன் இப்ராஹிம் நபியின் சந்ததியை நேசிப்பதைப் போலவே அனைத்து இனங்களையும் நேசித்தார். எல்லோரும் நியாய தீர்ப்பிற்கு பாத்திரவான்களாயிருக்கிறார்கள். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நியாயம் தீர்க்கவராமல் மக்களை இரட்சிக்க வந்தார். அவர் உலகத்தின் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை சிலுவையில் சுமப்பதன் மூலமாக உயர்த்தப்பட்ட சர்ப்பத்தின் உருவகத்தை நிறைவேற்றுகிறவர் என்பதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். இறைவனுடைய அன்புக்கு இனப்பாகுபாடு கிடையாது, அது அனைத்து மக்களுக்கும் உரியது.

குர்பான் இறையன்பின் வெளிப்பாடு

john 3-16 arabic

யோவான் 3:14 – 16

 

14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், 15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்  நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

 

ஈஸா அல் மஸீஹ் தொடர்ந்து நிக்கோதேமுவுக்குப் போதிக்கும்போது, உண்மையான மனந்திரும்புதலும், மனதில் ஏற்படும் ஒரு மாற்றமும், மனித சமுதாயத்துக்குப் பதிலாளாக மரித்த குர்பானான ஈஸா அல் மஸீஹ்வில் வைக்கும் ஈமானும் இல்லாமல் ஆவிக்குரிய பிறப்பு முழுமை யடையாது என்று கற்பித்தார். இஸ்ரவேலில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் குறிப்பிட்டதன் மூலம் ஈஸா அல் மஸீஹ் இந்தக் காரியங்களை நிக்கோதேமுவுக்கு தெளிவுபடுத்தினார்.

 

சீனாய் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியவர்கள் இறைவனுக்கு எதிராக முறுமுறுத்து, அவருடைய வழிநடத்துதலுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள் (எண். 21:49). அதன் விளைவாக இறைவன் அவர்களுடைய மூர்க்கத்தனத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் நடுவில் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார். அதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வபாத்தானார்கள்.

 

அவ்வா (அலை) அவர்களுக்கு சோதனை ஏற்பட்ட காலத்திலிருந்து பாம்புதான் தீமைக்கு அடையாளமாக இருக்கிறது. ஈஸா அல் மஸீஹ் வந்து  முழு மனித சமுதாயத்தினதும் பாவத்தைச் சுமந்தார். பாவமறியாதவர் நமக்காகப் பாவமானார். வனாந்தரத்திலிருந்த வெண்கலச் சர்ப்பத்தைப் போல ஈஸா அல் மஸீஹும் விஷமற்றவராக, அதாவது பாவ மற்றவராக நம்முடைய பாவத்தைச் சுமந்தார்.

இறைவனின் முகத்தைத் தேடுகிறீர்களா? அல்லது கரங்களை மட்டும் பார்க்கின்றீர்களா?

நாளாகமம் 7 14

“நாடு இப்படியே போச்சினா நம்ம பசங்கள்ட எதிர்காலம் என்னாவது!”

“இந்த நாட்டுல தொடர்ந்து வாழ்ந்தா நம்ம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். US போற வழிய தேடணும்”

இப்படியான கருத்துக்கள் எமது சமுதாயத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. எதற்கு எடுத்தாலும் நாட்டையும் நாட்டை ஆள்கிறவர்களையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இப்படி குறை சொல்லி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த பலர், கலாச்சாரப் பிரச்சினைகளால் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் “ஏன் திரும்ப வந்துவிட்டீகள் என்று கேட்டால், “அந்த கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது, என் பையனையே எனக்கு திட்ட முடியல, உடனேயே அவன் பொலிஸுக்கு போன் செய்கிறான் என்று குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்ட வேதனையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளிலிருந்து விடுபட, நான் வெளிநாடு போக முயற்சித்தேன். அப்பொழுது ஒரு தங்கை கூறினாள், “பிரச்சினை உங்களுக்குள் இருந்தால் அது எங்கு சென்றாலும் உங்களுடன் வரும் என்று. அந்த வார்த்தைகள் என்னை சிந்திக்கவைத்தது. எனது வெளிநாட்டு பயண எண்ணத்தை கைவிட்டேன். தொடர்ந்து போராடி இறை அருளால் அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியேறினேன்.

நாடு சீரழிந்துள்ளது என்று வேதனையில் இருக்கும் இறைவனுடைய பிள்ளைகளுக்கு இறைவன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 2நாளாகமம் 7:14ம் வசனத்தில் இறைவன் இப்படிச் சொல்கிறார்.

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

கிறிஸ்தவர்கள் நபிமார்களை அவமதிக்கிறார்களா?

  1. முஸ்லீம்கள் ஈஸா அல் மஸீஹின் பெயரை, முகமது நபியின் பெயரை, மற்ற நபிமார்களின் பெயரைச் சொல்லும்போது, (அலை) “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்கிறார்கள், ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?

இக்கேள்விக்கான பதிலை மூன்று வகையாக பிரித்துச் சொல்லலாம்:

  1. ஏன் கிறிஸ்தவர்கள் முகமது நபியின் பெயரைச் சொல்லும்போது “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.
  2. ஏன் கிறிஸ்தவர்கள் ஈஸா அல் மஸீஹின் பெயரைச் சொல்லும்போது (அலை) “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.
  3. ஏன் கிறிஸ்தவர்கள் மற்ற நபிமார்களின் பெயரைச் சொல்லும்போது (அலை) “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.

 

  1. ஏன் கிறிஸ்தவர்கள் முகமது நபியின் பெயரைச் சொல்லும்போதுஅவர் மீது சாந்தி உண்டாகட்டும்என்றுச் சொல்வதில்லை.

இதற்கான பதிலை நாம் தெரிந்துக்கொள்வதற்கு முன்பு, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன? இறைவேதம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ளவேண்டும். இறைவேதம் நமக்கு தெளிவாகச் சொல்கிறது. ஈஸா அல் மஸீஹ் தனக்கு பின்பு கள்ள (பொய் நபிமார்கள்) வருவார்கள் என்று தெளிவாக எச்சரித்துள்ளார்.

  1. ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்குப் பின்பு நிறைய பேர் தங்களை தீர்க்கதரிசிகள் (நபிகள்) என்று சொல்லிக்கொண்டு வருவார்கள், அவர்களை நம்பவேண்டாம்.

மத்தேயு 24:24

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

ஏன் குர்-ஆனை அரபியில் மட்டும் படிக்கவேண்டும்?

[இரவு மணி 8, எல்லாரும் சாப்பிட்டாகிவிட்டது, அப்துல்லா கொஞ்சநேரம் தன் வீட்டு திண்ணையில் உட்கார வேளியே வந்தான், தன் நண்பன் அப்ரஹாம் வீட்டுபக்கம் திரும்பி பார்த்தான், அவனும் தன் திண்ணையில் உட்கார்ந்து இருந்தான். இருவரும் ஒரே தெருவில் குடியிருக்கிறார்கள். அப்ரஹாமும் இவனைப் பார்த்தான், அப்ரஹாம் கையசைக்க, அப்துல்லா அவனைப்பார்க்க சென்றான்]

அப்துல்லா: என்னடா சாப்பிட்டாச்சா?

அப்ரஹாம்: இப்போ தான் முடிஞ்சுது, நீ சாப்பிட்டாயா?

அப்துல்லா: சாப்பிட்டேன். நான் கொடுத்த குர்-ஆனை படிச்சியா? இன்னிக்கு ஆபிஸ்லே கொஞ்ச நேரம் ஓய்வு கெடச்சது. அப்போ நீ குடுத்த புதிய ஏற்பாட்டை படிச்சேன். முதல் இரண்டு பக்கம் படிக்கிறதுக்குள்ளே, போதும் போதும் என ஆயிடுச்சி.

அப்ரஹாம்: [சிரிக்கிறான்] இனிமேல் தான் நீ தமிழை முழுசா கத்துக்கோ போறே.

அப்துல்லா: நீ மட்டும் என்னவாம். சுத்தமா ஒரு முஸ்லீம் பெயரைக் கூட உன்னால் சரியாக உச்சரிக்க முடியாது.

அப்ரஹாம்: சரி விடு, நீயாவது எனக்கு சொல்லக்கூடாது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? குர்-ஆன்லே முதல் பக்கம் திருப்புறேன், முதல் அதிகாரம் வரும் என்று பார்த்தா..! இன்டக்ஸ் வருது! யோசிச்சி பாத்ததிலே, அப்பரம் தான் புரிஞ்சுது, குர்-ஆனை இடது பக்கத்திலிருந்து அல்ல, வலது பக்கமாக படிக்கனும் என்று. எனக்கு நீ இங்லீஸ் மட்டும் இருக்கிற குர்-ஆன் குடுக்கக்கூடாது? ஏன்? அரபி/ஆங்கிலம் இருக்கிற குர்-ஆனை கொடுத்த.

அப்துல்லா: இப்போ என்கிட்டே இருக்கிறது அந்த குர்-ஆன் தான், அதுவும் எங்க சித்தப்பா, மக்காவிற்கு ஹஜ்ஜிற்கு போகும் போது அது குடுத்தாங்கலாம். வேறே இங்லீஸ் குர்-ஆன் வாங்கிக்கிலாம் விடு.

அப்ரஹாம்: சரி, என் கேள்விக்கு பதில் சொல்லு, சொல்லலே உன்னை விடமாட்டேன்.

1. ஏன் நீங்க எப்போதும் அரபியிலேயே குர்-ஆனை படிக்கிறீங்க?

2. புரியாத மொழியிலே நாம் படிச்சா, அல்லா சொன்ன செய்திகள் உங்களுக்கு எப்படி தெரியவரும்?

3. அல்லாவிற்கு அரபி தவிர வேறு மொழி தெரியாதா?

அப்துல்லா: உன் முதல் கேள்விக்கு பதில் சொல்றேன் கேளு. குர்-ஆனை எந்த மொழியிலேயாவது நாம் படிக்கலாம். ஆனால் அரபியிலே படித்தால் தான், அதிக நன்மைகள் வரும் என்று எங்க இமாம்கள், பெரியவங்க சொல்றாங்க.

அப்ரஹாம்: ஒரு வசனத்தின் பொருள் புரியாமல், பலமுறை படித்தாலும் அதனால் என்ன நன்மை சொல்லு? உதாரணத்திற்கு, நாம் எந்த பொருள் வாங்கினாலும், அதனோடுகூட ஒரு சின்ன புத்தகம் கொடுப்பார்கள். அந்த பொருளை எப்படி பயன்படுத்தவேண்டும், அது ரிப்பேர் ஆகிவிட்டால் எப்படி சரிசெய்யவேண்டும் போன்ற விவரங்கள் பல மொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் தமிழில் அல்லது நமக்கு தெரிந்த மொழியில் அந்த விவரங்களை படிப்போம், அப்பொருளை எப்படி பயன்படுத்தவேண்டும்  என்று தெரிந்துக் கொள்வோம்.

இதேபோலத் தானே வேதங்களும் பயன்படுகின்றன, நாம் எப்படி வாழவேண்டும், எப்படி சமுதாயத்தில் நடந்துக்கொள்ளவேண்டும் போன்றவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம்.

அப்துல்லா: இதற்காகத்தானே நாங்கள் மசூதிற்கு செல்கிறோம். அங்கு சொல்லப்படும் செய்திகளை நம்முடைய மொழியில் கேட்கிறோம். குர்-ஆனில் சொல்லப்பட்டதை அவர்கள் விளக்கிச் சொல்கிறார்கள். அறிஞர்கள் எழுதிய இஸ்லாமிய புத்தகங்களை படிப்போம்.

அப்ரஹாம்: அவர்கள் சொல்வதெல்லாம் சரியானது என்று அவர்கள் செய்திகளை சரிபார்ப்பது யார்? ஒவ்வொரு மனிதனும் தான் எதை நம்புகிறானோ, அதையே மற்றவர்களுக்குச் சொல்லுவான். உதாரணத்திற்கு ஒரு இமாம் ஜிஹாதில் அதிக கவனம் செலுத்துகிறவராக இருந்தால், அவர்களுடைய பேச்சு, செய்திகள் எல்லாம் அதைப்பற்றியே இருக்கும். வேறு ஒரு இமாம் தான் சமுதாயத்தில் சேவை செய்வதில் விருப்பமுடையவராக இருந்தால், அவருடைய எல்லா செய்திகளும், அதைச்சுற்றியே இருக்கும்.

இதில் பலியாவது யார் என்றால், இந்த செய்திகளை கேட்பவர்கள் தான். நாம் இப்போது இவைகளை செய்திகளில் பார்க்கிறோம். எல்லா இஸ்லாம் தீவிரவாதிகளும் உருவாவது மசூதியிலோ அல்லது மதரசாவிலோ? ஆனால் இங்கு இருக்கிற இஸ்லாம் அறிஞர்கள் “தீவிரவாதிகள் தவறு செய்கிறார்கள். குர்-ஆனை அவர்கள் தவறாக புரிந்துக்கொன்டார்கள்” என்று சொல்கிறார்கள். பழியை தீவிரவாதிகள் மீது போடுகிறார்கள்.

அப்துல்லா: நீ சொல்வதும் சரி தான். இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமானாலும், கெட்டவர்களால் அது ஆளப்படும்போது, அதை சரி பார்த்து கேள்விகேட்டு, திருத்த அனுமதி மறுக்கப்படும்போது, உண்மையாகவே நன்மையை விட, தீமை தான் அதிகமாக நடக்கும். மதம் என்பது கத்தியைப் போன்றது. அது யாரிடம் உள்ளதோ, அவர்களைப் பொருத்தே அதன் பயன்பாடும் இருக்கும்.

உன்னுடைய இரண்டாவது கேள்வியும், முதல் கேள்வியும் ஒரேமாதிரி தான். நான் மூன்றாவது கேள்விக்கு பதில் சொல்கிறேன். இறைவனுக்கு மொழி என்பது ஒரு பிரச்சனையில்லை. எனவே அல்லாவிற்கு எல்லா மொழிகளும் தெரியும். எந்த மொழியில் நாம் பேசினாலும் அவனுக்குப் புரியும்.

அப்ரஹாம்: அப்படியானால் இதற்கு பதில் சொல்லு, ஒருவன் இஸ்லாமில் வருகிறான் என்று வைத்துக்கொள், அவன் தன் சொந்த மொழியில், அல்லாவிடம் நமாஜ் (தொழுகை) செய்யலாமா? நமாஜ் செய்யும்போது சொல்லப்படும் கலிமாக்கள் ( சூராக்கள், வசங்கள்) தன் தாய் மொழியில் சொல்ல அவனுக்கு அனுமதி உண்டா? அல்லது அவன் அரபியில் மட்டும் தான் தொழவேண்டுமா?

அப்துல்லா: அவன் தன் சொந்த பிரச்சனைகளுக்காக வேண்டிக்கொள்ளும்போது வேண்டுமானால் தன் தாய் மொழியில் வேண்டிக்கொள்ளலாம். ஆனால் தினமும் 5 வேளை தொழுவது மட்டும் அரபியில் மட்டும் தான் இருக்கவேண்டும்.

அப்ரஹாம்: ஏன்?

அப்துல்லா: குர்-ஆன் அரபியில் இறக்கப்பட்டது, அதனால் நாம் அரபியிலேயே தொழவேண்டும். மற்ற மொழியில் தொழுதால் அதன் தனித்தன்மை, இலக்கிய நடை பாதிக்கப்படும்.

அப்ரஹாம்: பொருள் முக்கியமா? இலக்கிய நடை முக்கியமா? பைபிள் எபிரேய, மற்றும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டாலும், “ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு”, “உன்னை பகைக்கிறவர்களுக்காக ஜெபம் செய்” போன்ற வசனங்கள், நம் தாய் மொழியில் படித்தால் தான் பிரயோஜனமே தவிர, இலக்கிய நடைக்காக நாம் கிரேக்க மொழியில் படிக்க முடியாது. அப்படி படித்தாலும் ஒரு நன்மையுமில்லை.

அப்துல்லா: சரி உனக்காகவாவது நான் இனிமேல் தமிழிலோ அல்லது இங்லீஸிலோ குர்-ஆன் படிப்பேன். சரியா? அடுத்த முறை நான் நிறைய விஷயங்கள் பைபிள் பற்றி கத்துகிட்டு வந்து, நான் கேள்வி கேட்கிறேன். நீ பதில் சொல்லு.

அப்ரஹாம்: எனக்காக படிக்க வேண்டாம், உனக்காக படி, குர்-ஆனில் என்ன இருக்கு? அல்லா என்ன சொல்றாறு? என்று தெரிஞ்சிக்கோ.

அப்துல்லா: சரி நான் வருகிறேன், மறுபடியும் பார்க்கலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்ரஹாம்: “வாஅலைக்கும் ஸலாம்” அரபியில் சொல்லிட்டேன் மன்னிக்கனும்,இதோ தமிழ் “உன் மீதும் சாந்தி உண்டாகட்டும்”

(நன்றி ஈஸா குர்-ஆன்)

சிலுவை குர்பான் மறுதலிப்பு! – இஸ்லாமியரின் இரட்சிப்பு இழப்பு!

ஆசிரியர்: அஸ்கர்

‘ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும்  இருக்கிறேன். பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. (ஸூரா 3:55 பி ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)

முன்னுரை: 

ஈஸ்டர் பெருநாள் இறைவேதம் குறிப்பிடுவது போல, ஈஸா அல் மஸீஹ்வைப் பின்பற்றும் எவருக்கும் மிக முக்கியமான ஒரு திருநாளாகும். இந்த பண்டிகையின்போது, மஸீஹ் ஆகிய ஈஸா சிலுவையில் குர்பானியாகி மரித்த சம்பவங்களை நினைவுகூர்வது மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. 1 கொரிந்தியர் 15:1-20 சொல்வது போல, இதுவே ஈஸ்டர் திருநாளின் மையப் பொருளாக இருக்கிறது.

அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்…கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,  கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.  அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், …கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா…கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்… கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

ஒரு ஜிஹாதியை ஈஸா அல் மஸீஹ் சந்திக்கிறார்

kamal saleem 

கமல் சலீம்ஓர் சவுல் மீண்டும் நடுரோட்டில் இயேசுவை கண்ட அதிசயம் 
முன்னாள் இஸ்லாமிய தீவிரவாதி 
இன்றைய தீவிர விசுவாசி

1957 ஆம் ஆண்டு லெபனானில் பிறந்த இவர் ஒரு சுன்னி முஸ்லிம் ஆவார். அதோடு சலீம் ஒரு தீவிர யூத விரோதியாவர்.

இன்றோ, கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தலைவர்களுக்கும், உள்துறை நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார்.

4 வயது குழந்தையாய் இருக்கும் போதே இவருடைய தாயார் அமெரிக்கர்களையும், யூதர்களையும் கொன்று குவித்து முகமதிய சமயத்திற்காக உயிர் துறக்கும் தியாகியாக மாற வேண்டும் என்று போதிக்கபட்டார். 7 வயதில் முதற் முயற்சியாக ஆயுதங்களை கடத்தும் குழந்தையாக அப்போதைய பாலஸ்தீன தீவிரவாத தலைவர் யாசர் அராபாத்துக்காக செயல்பட்டார். 15 வயதில் வெடிமருந்துகளில் மன்னனான இவர், லிபிய முன்னாள் அதிகாரியான முகமது கடாபியின் ஆட்சிகாலத்தில் அங்குள்ள பாலைவன தீவிரவாத முகாம்களில் உள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தார்.

வாலிபனான பொது இவரின் தீவிரவாத மூர்க்கம் அதிகரித்தது. பாரிஸ், லண்டன், ஆப்கானிஸ்தான், செல்வசெளிபுள்ள அரபு ஷேக்குகளிடம் சென்று தீவிரவாத இயக்கங்களுக்கு தேவையான நிதிகளை திரட்டி வந்தார். உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதே இதன் அடிப்படை. அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள நலிந்த மக்களை தன்னுடைய திறமையால் முகமதிய மதத்திற்கு மாற்றினார்.

இதன் மத்தியில் ஓர் நாள் கொடுமையா விபத்தொன்றில் சிக்கினார். இவர் இவரின் இயக்கங்களுக்கு பணம் திரட்டிய போதும் தன்னை பற்றியோ, குடும்பத்தை பற்றியோ கவலை பட்டதில்லை. மருத்துவ காபீடோ, குடும்பத்தில் போதிய பணமோ இல்லாததினால் படுத்த படுக்கை ஆனார். இவரை கவனிக்க ஆளில்லாமல் மிகவும் வருத்தப்பட்டார். இவருடன் பிறந்தவர்கள் 13 பேர்.

கிறிஸ்தவர்களின் அன்பு இவரின் மனதை மாற்றியது. இவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தேவனை அதிகமாக நேசிப்பவர். இவரை காபற்றின கிறிஸ்தவர் கமல் சலீமை தன்னுடைய வீட்டில் தங்க சொன்னார். கமல் சலீம் குணம் அடைய கிறிஸ்தவ கூடுகைகளில் ஜெபம் செய்யப்பட்டது. இவருக்காக காணிக்கையும் எடுத்தார்கள். இதை பார்த்த கமல் சலீமின் மனம் உடைந்தது. அல்லாவிடம் ஜெபம் செய்தார். தீவிரவாத முகாம்களில் அன்பை பற்றி போதிதிராத காரணத்தினால் இவர் கிறிஸ்தவரின் அன்பை புரிந்து கொள்ளவில்லை. ஏன்? அல்லா தன்னை கைவிட்டு விட்டாரோ? ஏன் என்னை இனிலமைக்கு ஆளாக்கினார் என்று இவர் கேள்விக்கு அல்லாஹ்விடம் இருந்து பதில் வரவில்லை. “அல்லாஹ், என்னை ஏன் எதிரிகள் கைகளில் ஒப்படைத்தாய்? இவர் அல்லாஹ்வின் அற்புதத்தை பார்க்க விரும்பினார். “அல்லாஹ்.. நீர் இருப்பது உண்மையானால், நான் உன் குரலை கேட்க வேண்டும்என்று கதறினார். ஒன்றும் நடக்கவில்லை.

அநேரத்தில் இவரின் மனதில்ஏன் நாம் ஆபிரகாமின் தேவன், இசாக்கின் தேவன், யாகோபின் தேவனை கூப்பிடகூடாது?” என்ற கேள்வி எழுந்தது. அதி முதல்யேகோவா தேவனைநோக்கி கூப்பிட ஆரம்பித்தார். அப்போது ஆணிகள் கடாவபட்ட இரு கரங்கள் இவருக்கு முன்பாக பயங்கர பரிசுத்த தேவன் காண்பித்தார்.

இயேசு கிறிஸ்து கமல் சலீமிடம் பேச ஆரம்பித்தார். அவரின் இனிய குரலை முதன் முதலாக கமல் சலீம் கேட்டார். பரிசுத்த தேவன் தான் கமல் சலீமை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதை அன்போடு, கனிவோடு பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு கமல் சலீமின் காயங்கள் முழுவதும் ஆறிப்போனது. அதிசயத்தின் தேவன் மீண்டும் ஓர் சவுலை பவுலாக மாற்றினார். அல்லேலூயா…. ஆமென்..

வேதாகமத்தை வாசிக்க வாசிக்க தேவன் தன்னிடம் பேசுவதை உணர்ந்தார். இன்று கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தலைவர்களுக்கும், உள்துறை நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார்.

அன்பார்ந்த கிறிஸ்தவ விசுவாசிகளே, இவரை போன்ற ஆயிரம் ஆயிரம் சாட்சிகள் நம்மை சுற்றிலும் உள்ளன. ஜெபியுங்கள். அன்பு கூறுங்கள். தேவன் உங்கள் அருகில் உள்ள அனைவரிடமும் பேச முடியும். நம்மை முழுவதுமாக தாழ்த்துவோம்.

எபிரெயர்.12: 1. ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்

மேலும் இவரை பற்றி.. http://kamalsaleem.com/

இவர் எழுதிய புத்தகம்

The Blood of Lambs: A Former Terrorist’s Memoir of Death and Redemption

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

ஈஸா அல் மஸீஹ் கலிமதுல்லாஹ் என்றால், அவர் இறைவன் என்றால், “என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அவர் ஏன் மன்றாடினார் என்பது எம்மில் பலரும் கேட்கின்ற ஒரு கேள்வி. இதனை ஆதாரம் காட்டி, புத்திஜீவிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒருவராயிருக்கையில், எப்படி மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையே குர்பானாக கொடுத்தார் என்று தங்களை கேள்வி கேட்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அல் கிதாப் எனும் இறைவேதம் வருடந்தோறும் மாற்றப்படுகிறது என்று பொய்க்குற்றச்சாட்டை முன்வைக்கும் அதே அறிஞர்கள், அல் கிதாபின் சத்திய போதனைகளுக்கு, என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற வசனம் அச்சுறுத்தலாக இருந்தால், ஏன் இன்னும் அதனை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள் என்று கொஞ்சமாவது சிந்தித்திருந்தால், அவர்களின் இரு குற்றச்சாட்டுக்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே என்று தங்களைக் குறித்துத் தாங்களே வெட்கப்பட்டிருப்பார்கள்.

அல்லாஹ்வின் அன்பு

அகிலத்தையும் படைத்தவனே றப்புல் ஆலமீன்

அன்பு கொண்டு ஆழ்பவனே றப்புல் ஆலமீன்

துன்ப துயரம் போக்க வல்ல தூய நாயனே!

துயர் நீக்கி காக்க வல்ல எங்கள் ரஹ்மானே!

 

உம்மத் உந்தன் வழியை மறந்து தூரப் போகையில்

மனம் அழுது மறை வழியின் மேன்மை காட்டினாய்

மந்தையென அடிமையாக வாழ்ந்த மனிதர்க்கு

தௌராத் வேதம் மூஸா வழி நீயும் கொடுத்தாய்

 

மக்கள் உந்தன் மேன்மை வழி தொடர்ந்து போகையில்

மாறி வந்த சந்ததியோ வழி மாறிப் போயினர்

மேன்மை வாழ்வை இழந்து தடுமாறி நிற்கையில்

ஸபூர் வேதம் தாவூத் வழி நீயும் கொடுத்தாய்

 

கொழுத்துப் போன இருதயங்கள் கொடுமை செய்தது

கொடிய வழியில் இறையை மறந்து பாவம் செய்தது

அரிய வழியை இழந்து உம்மத் அல்லல் படுகையில்

அறைகூவும் இறைதூதர்கள் தொடர்ந்து அனுப்பினாய்

 

இன்ஜீல் வேதம் இறைவன் வகுத்த வழியைச் சொன்னது

ஈஸா மஸீஹின் தியாக வாழ்வு புது வழியைத் திறந்தது

யாரும் காணா அருட்கொடையாம் அல்லாஹ்வின் அன்பையே

அகிலம் காண உன்னைக் கொடுத்தாய் ஈஸா மஸீஹே!

 

மறுபிறப்பின் அவசியம் (யோவான் 3:1-13)

யோவான் 3:6-8 

6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். 8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்னஇடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.

ஒவ்வொரு மனிதனிலும் ஏற்பட வேண்டிய அடிப்படையான மாற்றத்தை ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவுக்குக் காண்பித்தார். இந்த மாற்றம் மாம்சத்திற்கும் ஆவிக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் போல மிகவும் பெரிய மாற்றமாகும். இன்ஜீலில் மாம்சம் என்ற வார்த்தை இறைவனைவிட்டுப் பிரிந்துபோன மனிதனுடைய விழுந்துபோன சுபாவத்தையும் அழிவை நோக்கிச் செல்லும் ஒரு துன்மார்க்கனையும் குறிக்கிறது. அந்த வார்த்தை சரீரத்தை மட்டும் குறிக்காமல், கலகம் பண்ணும் மனதையும் ஆவிகளையும் குறிக்கிறது. இது முழுவதும் சீரழிந்த நிலை. ஈஸா அல் மஸீஹ் குறிப்பிட்டதுபோல, இருதயத்திலிருந்து தீய எண்ணங்கள் புறப்பட்டு வருகிறது. எந்த மனிதனும் இறைவனுடைய அர்ஷில் நுழைவதற்குத் தகுதியானவன் அல்ல. மனிதன் பிறப்பிலிருந்தே தீயவனாக இருப்பதால் தீமையின் பிறப்பிடமாகவும் இருக்கிறான்.

நான் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்?

 யோவான் 3:1-3 

1 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 2 அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். 3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 

அந்த சமுதாயத்திலிருந்து நிக்கோதேமு என்று ஒருவர் தோன்றினார். அவர் பயபக்தியுள்ளவரும், சமுதாயத்தில் முக்கியமானவரும் ஷுறா சபையிலுள்ள எழுபதுபேரில் ஒருவருமாவார். இறைவனுடைய குத்ரத் மஸீஹ்வில் செயல்படுவதை அவர் அறிந்துகொண்டார். ஒருவேளை அவர் இந்தப் புதிய தீர்க்கதரிசிக்கும் யூத சபைக்குமிடையில் ஒரு பாலத்தைக் கட்ட விரும்பியிருக்கலாம். அதே வேளையில் அவர் உலமா சபைக்கும் பொதுமக்களுக்கும் பயந்திருந்தார். அவர் ஈஸா அல் மஸீ்ஹ்வை குறித்து நிச்சயமற்றவராக இருந்த படியால் அவருடன் சேருவதற்கு முன்பாக யாருக்கும் தெரியாமல், இரகசியமாக இருட்டில் அவரைக் காண வந்தார்.

உண்மையின் வெளிச்சத்திற்கு

அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கடிதம் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். நானும் என் குடும்பத்தாரும் சந்தோஷமாக, அல்லாஹ்வின் ரஹ்மத்தோடு வாழ்ந்து வருகிறோம். உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் குடும்பத்தாரின் சுகத்துக்காகவும் அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன்.

உங்களின் விடாமுயற்சி எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இறை வேதம் கூறுகிறது:   “சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”. உங்கள் மீது அல்லாஹ் மட்டில்லாத அன்பு வைத்துள்ளான் என்பதை நான் உணர்கிறேன். இதனால் தான் கடந்த 7 மாதங்களாக எமது உறவு தொடர்ந்து வருகிறது.

சென்றவாரம் பிஜே பற்றிய முஸ்லீம்களின் விமர்சனங்கள் சிலவற்றை படித்தேன். அதில் ஒரு கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. பிஜேயின் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்ற ஒருவர் பிஜேயைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “பிஜே எங்களோடு கதைத்துக்கொண்டிருக்கின்ற வேளைகளில் அடிக்கடி கூறுவார் ‘நான் அல்லாஹ் என்று ஒருவன் இல்லையென்று வாதாடினாலும் நான் தான் வெற்றிபெறுவேன்.’” நடுநிலை வகித்து இந்த கருத்தை பார்க்கும் பொழுது, பிஜே உண்மையை பேசியிருப்பது தெளிவாகின்றது. உண்மையில் இயற்கையாக விவாத திறமையுள்ளவர்கள் தர்க்கவியலிலும் புலமைப்பெற்றிருந்தால் எந்தவொரு பொய்யையும் மெய்ப்பிப்பது அவர்களுக்கு சர்வசாதாரணம்.

அல் ஹக் (சத்தியம்) என்பது நாவண்மையை சார்ந்திருப்பதல்ல. அதனை யாராலும் அழிக்கமுடியாது. அதனை பாதுகாக்க மனித பலமோ, ஜிஹாதோ தேவையுமில்லை. அல்லாஹ்வை மனிதர்கள் காப்பாற்றுவதற்கவே ஜிஹாத் என்று நினைக்கத்தோன்றுகிறது. ஏனென்றால் நாங்கள் ஹக்கை காப்பாற்றவே ஜிஹாத் செய்கின்றோம் என்று பறைசாட்டுவது அடிக்கடி எங்கள் காதுகளை எட்டுகிறது. இது நகைப்புக்குறிய காரியமாக இருந்தாலும் எனக்குள் மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. காரணம் ‘அல்லாஹ்வுக்காக காபிர்களை அழியுங்கள்’ என்ற போதனையில் மயங்கி, எமது இளம் சமுதாயம் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வது உலகலாவிய ரீதியில் பெருகிக்கொண்டே வருகிறது. இலங்கையில் முஸ்லீம்கள் முஸ்லீம்களை கூட ஜிஹாத் என்ற பெயாpல் கொலைசெய்த சம்பவங்களும் உங்களுக்குத் தெரியாமலிருக்காது. உதாரணமாக பேருவளை சம்பவம், பயில்வான் சம்பவங்களை கூறலாம்.

அல் ஹக் என்றால் இறைவன். இறைவனை அறிந்துக்கொள்ளுதல் என்பது இறைவனைப் பற்றி அறிந்துகொள்வதல்ல. இவ்விரண்டிற்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது. இறைவனைப் பற்றி அல்லது சத்தியத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள பெற்றோர் கூரிய காரியங்கள், பாடசாலையில் கற்ற காரியங்களை அறிஞர்களின் போதனைகள், இறைவனைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் எங்களுக்கு உதவி புரியலாம். இவற்றின் மீது எங்கள் நம்பிக்கை எனும் கட்டிடத்தை கட்டினால் மனலில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ஒப்பாகுவோம்.

இறைவனை அறிந்துகொள்வதென்பது, ஆதம் (அலை) எவ்வாறு இறைவனோடு உறவுவைத்திருந்தாரோ அதேபோன்று இறைவனோடு உறவு வைப்பதாகும். இலகுவாக விளங்கிக்கொள்ள கணவன் மனைவிக்கிடையில் இருக்கும் ஐக்கியத்தை ஒப்பிடலாம்;. அன்பு சகோதரனே, இது ‘இந்தப் பழத்தின் சுவை இப்படிப்பட்டதென்று’ நீங்கள் சாப்பிட்டில்லாத ஒரு பழத்தை குறித்து நான் விளக்கம் கொடுப்பது போன்று தோன்றுகின்றது. இதனால் தான் நீங்கள் எப்பொழுது முஸ்லிமானீர்கள் (இறைவனுக்கு உங்களை அர்ப்பணித்தீர்கள்) என்று கேட்டிருந்தேன். உங்களின் பதில் ‘இறைவனைப் பற்றி சில காhpயங்களை அறிந்துள்ளேன் என்றுதான் இருக்கின்றது. “குலில் ஹக்கு வலவ்கான முர்ரா” “கசப்பாக இருந்தாலும் உண்மையே பேசு”  என்ற பழமொழிக்கினங்க இந்த உண்மையை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளேன். அதாவது நீங்கள் (உண்மை) முஸ்லீம் அல்ல. ஆதம் நபியைப்போன்ற முஸ்லிம் அல்ல. இப்ராஹிம் நபியைப்போன்ற முஸ்லீம் அல்ல. மூஸா நபியைப் போன்ற முஸ்லீம் அல்ல.

ஒருவன் வளர்ப்பில் முஸ்லிமாவான் என்பதை யூசுப் கர்ளாவி போன்ற அறிஞர்களே ஏற்க மறுக்கின்றனர். ஒருவன் பருவவயதை அடைந்தவுடன் தன்னை அர்ப்பனிப்பதற்கூடாகவே ஒருவன் முஸ்லிமாவதாக கூறுகின்றனர். ஆகவே நீங்களும் உண்மை முஸ்லிமாக வேண்டும் எனும் அவாவிலேயே உங்களோடு கடித தொடர்ப்பை ஏற்படுத்தி, என்னால் முடிந்தவரை அல் ஹக்கை குறித்து உங்களுக்கு தெளிவுபடுத்த முற்படுகிறேன். ‘வல்ல நாயன் சத்தியத்தை (தன்னை) வெளிப்படுத்துவானாக’ ஆமீன்.

அன்பு சகோதரனே அல்;லாஹ்வுக்காக எதனையும் செய்ய எம்மால் முடியாது. ஆனால் அவனால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உண்மையாக தேடுவோருக்கு ஏக இறைவன் நிச்சயமாக நேர்வழி காட்டுவன். நேர்வழிபெற்ற உண்மை முஸ்லீம் கூட்டத்தில் உங்களையும் சேர்த்துக்கொள்வானாக.

இப்படிக்கு

உங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நண்பன்.

இறைநேசன்