பெரேலி முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.
பெரேலி நகரமானது உத்தரா பிரதேசத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாகும். ஏழு ஆறுகள் அங்கே உண்டு. ஆனாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதில்லை. வாலிபர்களை தொழில் ரீதியாக கவர்ந்து ஈர்க்கும் இந்த பெரேலியில் முஸ்லீம்கள் அநேகமாக தங்கள் சொந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.
இங்கு வசிக்கும் 35 வீதமான முஸ்லீம்களின் குடியிருப்பு நகர மத்தியில் அமைந்து, அவர்களின் வளர்ச்சியும் அதிகரிக்க, இந்துக்களின் குடியிருப்புக்கள் நகரத்துக்கு வெளியாக அமைந்துவிட்டது. இதனால் இனவாத குழுக்களிடையே பிளவுகள் அதிகரித்து, அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது. இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியிலும் மத ரீதியான சண்டைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துஆ
- பெரேலி முஸ்லீம்கள் மத்தியில் ஊழியம் செய்ய அநேக கிறிஸ்தவர்கள் இறை தரிசனத்தை பெற துஆ செய்வோம்.
- தற்பொழுது ஊழியம் செய்து கொண்டிருக்கிறவர்களின் பாதுகாப்புக்காவும், ஆவிக்குறிய மற்றும் சரீர தேவைகளுக்காகவும் துஆ செய்வோம்.
- ஈஸாவை ஈமான் கொண்ட பெரேலி முஸ்லீம்கள் தங்கள் இனத்தவர்களுக்கு சத்தியத்தை சொல்லவும், அவர்கள் மத்தியில் சபை ஸ்தாபிக்கவும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலை பெறவேண்டும் என்று துஆ செய்வோம்.
- புதிய விசுவாசிகளின் பாதுகாப்புக்காவும் அவர்களை வழிநடாத்துகிறவர்களின் பாதுகாப்புக்காகவும் துஆ செய்வோம்.
Leave a Reply