மக்கள் ஈஸா அல் மஸீஹ்வைச் சார்ந்துகொள்ளுதல்

மக்கள் ஈஸா அல் மஸீஹ்வைச் சார்ந்துகொள்ளுதல்


23وَلَمَّا كَانَ فِي أُورُشَلِيمَ فِي عِيدِ الْفِصْحِ، آمَنَ كَثِيرُونَ بِاسْمِهِ، إِذْ رَأَوْا الآيَاتِ الَّتِي صَنَعَ. 24لكِنَّ يَسُوعَ لَمْ يَأْتَمِنْهُمْ عَلَى نَفْسِهِ، لأَنَّهُ كَانَ يَعْرِفُ الْجَمِيعَ. 25وَلأَنَّهُ لَمْ يَكُنْ مُحْتَاجًا أَنْ يَشْهَدَ أَحَدٌ عَنِ الإِنْسَانِ، لأَنَّهُ عَلِمَ مَا كَانَ فِي الإِنْسَانِ.

 

இன்ஜீல் (யோவான் 2:23-25)


பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். 24 அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. 25 மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.

யூத சமூகத்தினர் தங்களுடைய மூதாதையர்கள் எகிப்தைவிட்டு புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பாதுகாத்த பஸ்கா ஆட்டுக்குட்டியை நினைத்துக் கொண்டு, தாங்கள் கொர்பானி கொடுத்த ஆட்டுக்குட்டியைப் பகிர்ந்து உண்டார்கள்.

 

இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய ஈஸா அல் மஸீஹ் எருசலேமுக்கு வந்து, அநேக அற்புதங்களைச் செய்து தன்னுடைய அன்பையும் வல்லமையையும் காண்பித்தார். அதனால் மக்கள் கூட்டம் அவரைக் கவனித்தது, அவரைப் பற்றி பலர் பேசத் தொடங்கினார்: அவர் ஒரு நபியா, அல்லது ரஸுலா இல்யாஸ் நபியா, அல்லது ஒருவேளை மஸீஹாக இருப்பாரோ? என்றெல்லாம் முணு முணுத்துக்கொண்டார்கள். பலர் அவரிடம் ஈர்ப்புண்டு அவர்இறைவனிடமிருந்துவந்தவர்என்றுஈமான் கொண்டார்கள்.

 

ஈஸா அல் மஸீஹ் அவர்களுடைய இருதயத்தைப் பார்த்தார், ஆனால் அவர்களில் யாரையும் தன்னுடைய சீஷனாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் அவருடைய இறைத்தன்மையை இன்னும் புரிந்து கொள்ளவில்லை, இன்னும் உலகப் பிரகாரமாகவே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனையில் ரோமர்களுடைய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது, சரியான வேலை கிடைப்பது, வசதியான எதிர் காலத்தைப் பெற்றுக்கொள்வது போன்ற காரியங்களே காணப்பட்டது. ஈஸா அல் மஸீஹ் எல்லா மனிதர்களையும் அறிந்திருந்தார்; எந்த இருதயமும் அவருடைய கண்களுக்கு மறைந்திருக்கவில்லை. யாருமே இறைவனை உண்மையாகத் தேடவில்லை. அவர்கள் உண்மையிலேயே இறைவனைத் தேடியிருந்தால், அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து மனந்திரும்பி, ஜோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றிருப்பார்கள்.

 

ஈஸா மஸீஹ் உங்கள் இருதயத்தையும், சிந்தனைகளையும், விண்ணப்பங்களையும், பாவங்களையும் அறிந்திருக்கிறார். உங்களுடைய சிந்தனைகளையும் அவைகள் எங்கிருந்து வருகிறது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஒரு ஒழுக்கமான நீதியுள்ள வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள் என்று அவர் அறிவார். உங்கள் பெருமை எப்போது அசைக்கப்படும்? உங்கள் சுய மரியாதையிலிருந்து நீங்கள் எப்போது திரும்பி ரூஹுல் குத்தூஸினால் நிரம்புவீர்கள்?

 

இந்த சின்ன விஷயத்துக்கு போய்….

 

ScreenHunter_446 Sep. 10 16.51

பகுதி 1

எனது நண்பர் ஒருவரின் தந்தையாரை பாதை கடவையில் விபத்துக்குள்ளாக்கி, காலை முறித்த, பிரதான வங்கியொன்றின் உயர் அதிகாரி இப்படி சொன்னார் “இது ஒரு சின்ன விஷயம்தானே! இதுகு போய்….”

 

விபத்துக்குள்ளான தந்தைக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எப்படியிருக்கும் இந்த உயர் அதிகாரியின் பேச்சு என்று சிந்தித்துப் பாருங்கள். தண்டனை பெறவேண்டிய இந்த அதிகாரி தான் செய்த தவறை எவ்வளவு சூட்சமாக மறைக்கிறார் என்பதை உணரும் போது எப்படியிருக்கிறது. தான் தவறு செய்யவில்லையென்று நேரடியாக வாதாடமுடியாததால் இப்படியான சாதூர்யமான முறையில் தவறை மறைக்கிறவர்களாக பலரும் இருக்கின்றனர்.

 

ஒருமுறை எனது இன்னுமொரு நண்பர் தனது இரு சக்கர வண்டியில் பயணிக்கும்போது ஒரு பெண்ணின் கைப்பை அவர் வண்டியில் சிக்கியது. நண்பர் மீது தவறு இல்லாமல் இருந்தும் மனிதாபிமானமாக அவர் அந்த பெண்ணிடம் மன்னிப்புக்கோரினார். அதற்கு அந்த பெண்ணோ கெட்ட வார்த்தைகளால் எனது நண்பரை திட்டித்தீர்த்து விட்டார். அந்த கெட்ட வார்த்தைகள் காரணமாக, அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கொடுக்க என் நண்பருக்கு சில நாட்கள் சென்றதாக கூறினார்.

 

இந்த இரண்டு சம்பவங்களை பார்க்கும் போது, ஒருவர் தவறு செய்தும் அது தவறில்லை என்று மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கிறார். மற்றவர் தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்டு மன்னிக்கப்படாமல் இருக்கிறார். இவர்களில் யார் செய்தது சரியானது என்று பார்ப்பதல்ல இந்த கட்டுரையின் நோக்கம். நாங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்பதே நோக்கமாகும்.

பைதுல் முகத்தஸை சுத்திகரித்தல்

 ScreenHunter_442 Sep. 09 10.58ScreenHunter_441 Sep. 09 10.58


யோவான் 2:13-17 


13 பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 14 தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும் காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, 15 கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16 புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17 அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

 

 

யூதர்களின் மாபெரும் பண்டிகையாகிய பஸ்கா பண்டிகைக் காலத்தில் ஈஸா அல் மஸீஹ் எருசலேமுக்குச் சென்றார். அந்தப் பண்டிகையின்போது உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் எருசலேமில் கூடி, பஸ்கா ஆட்டுக்குட்டியினிமித்தமாக தங்களுடைய மக்களை இறை கோபம் அழிக்காமல் விட்டுவிட்டதை நினைவுகூர்ந்து ஆட்டுக்குட்டிகளை குர்பான் கொடுப்பார்கள். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை. இறைவனோடு ஒப்புரவாகாமல் செய்யப்படும் தொழுகை பொருளற்றது. யோர்தான் நதியில் ஈஸா அல் மஸீஹ் திருமுழுக்கு எடுத்தது அவர் உலகத்தின் பாவத்தைத் தன்மீது ஏற்றுக்கொண்டார் என்பதன் அடையாளமாயிருக்கிறது. அந்த மக்களுக்காக அவர் மரணம் என்னும் ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்வார். இது அவர் இறை கோபத்தைச் சுமப்பார் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது. தானே தெரிவுசெய்யப்பட்ட இறைவனுடைய ஆட்டுக் குட்டி என்பதை அவர் நிச்சயமாக அறிந்திருந்தார்.

அவர் எருசலேம் நகரத்துக்குள் நுழைந்து பைதுல் முகத்தஸின் மண்ட பத்தை நோக்கிச் சென்றபோது, இறை இல்லத்தின் மகிமையைப் பார்த்து அவர் பிரமிப்படையவில்லை. மாறாக தன்னுடைய குர்பானின் மூலமாக மனுக்குலத்திற்கு கிடைக்கப் போகிற இரட்சிப்பைக் குறித்து தியானித்துக் கொண்டிருந்தார். அந்த தொழுகைக்கான பள்ளிவாசலில் அவர் அமைதியைக் காணாதது ஆச்சரியமானது. புழுதியையும் இரைச்சலையும், பசுக்களின் கத்துதலையும், வியாபாரிகளின் சச்சரவுகளையும், மிருகங்களின் இரத்தத்தையுமே அவர் கண்டார். மேலும் மற்ற நாட்டு காசுகளை யூத காசாக மாற்றும் காசாளர்களின் இரைச்சலையும் கேட்டார். வெவ்வேறு நாடுகளிலிருந்து அங்கு புனிதப் பயணமாக வந்திருக்கும் யூதர்கள் தங்கள் குர்பானிகளை வாங்குவதற்கு யூதப்பணம் தேவைப்பட்டது.

ஆலோசனை என்றால் என்ன?

ஆலோசனை என்றால் என்ன?

 

images.jpg council

 

தீர்வை தேடி மருத்துவரிடம் செல்வதற்கு பலரும் யோசிப்பார்கள். ஆனால் இது ஒரு ஆய்வின் ஒரு பகுதி மாத்திரமேயாகும். மருத்துவர் முன்வைக்கின்ற புத்தகத்தில் பெற்றுகொள்ளமுடியாத காரியம் அனுபவமாகும்.  

அநேக போலியான கருத்துக்கள் உள்ளன.

நீங்கள் இந்த கலாச்சாரத்துக்குள் வாழ்வீர்களானால் உங்கள் சிந்தைக்குள் ஆலோசனை சம்பந்தமான கருத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கலாம். ஆலோசனை வழங்குவது என்பதை இவ்வாறு வரையறுக்கலாம்.

“பலவீனருக்கு” ஓர் ஒத்தாசை.

அது…’

அது மனநிலையை “பகுப்பாய்வு செய்வது” அவசியமானவர்களுக்கு.

ஆலோசனை வழங்குவது இந்த ஒரு காரியத்துக்காக மாத்திரமல்ல. தேர்ச்சிபெற்ற ஒருவருடன் ஏற்படுத்திக்கொள்கிற படிமுறை ஆலோசனை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு உதவியாக அமையும்.

 

தேர்ச்சிபெற்ற ஒருவருடன் ஏற்படுத்திக்கொள்கிற படிமுறை ஆலோசனை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு உதவியாக அமையும்.  

  • உங்கள் செயல்கள், உணர்வுகள் மற்றும் தொடர்புகளுக்கு ஒரு காட்சி கோணத்தை ஏற்படுத்துவதற்கு வழியை அது ஏற்படுத்தும்.
  • அது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் சிந்திக்கும் முறையை அறிந்து கொள்ளவும் வழிமுறைகளை முன்வைக்கிறது.  
  • அது பலமுறைகளில் சோர்வு, மன அழுத்தம், கோபத்தை கட்டுப்படுத்துகிறது.
  • அது சண்டை சச்சரவுகளுக்கு முகம்கொடுக்கும் போது, தொடர்பாடல் ஆற்றலை வளர்த்துகொள்ள உதவியாக இருக்கும்.
  • அது வேதனைகளுக்கு முகம்கொடுப்பதால் ஏற்படும் இழப்புகளுக்கூடாக செயல்பட்டு, உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற உதவியாக அமையும்.

பின்வரும் முறைகள் அதற்குள் அடங்கலாம் அடங்காமலும் இருக்கலாம். ஆலோசனை வழங்குவது என்பது திறமைகளை வளர்த்துக்கொள்ள, ஆலோசனை பெற்றுகொள்ளும் படிமுறை. என்று நீங்கள் சிந்திப்பீர்களேயானால், நீங்கள் பலவிடயங்களை இழக்கவேண்டி ஏற்படும்.

அப்படியென்றால் லோசனை வழங்குதல் என்றால் என்ன?

கானாவூர் கல்யாணத்தில் கராமத்

 


இன்ஜீல் (யோவான் 2:1-10)


1 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.  2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3 திராட்ச ரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

 

ஈஸா அல் மஸீஹ் தம்முடைய சகாக்களை யோர்தான் மலையிடுக்கின் யஃயா நபியுடைய மனந்திரும்புதலின் பள்ளதாக்கிலிருந்து, கலிலேயா மலைப்பகுதியிலிருந்த கானாவூர் கல்யாண மகிழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இந்த 100 கிலோமீட்டர் பிரயாணம் இரண்டு ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள தீவிரமான மாற்றத்தை நமக்குக் காண்பிக்கிறது. இனிமேல் முஃமீன்கள் ஷரீயாவின் நிழலில் வாழ வேண்டிய அவசியமில்லை, அவர்கள் உதய சூரியனும் சமாதானக் காரணருமாகிய ஈஸா அல் மஸீஹோடு நீதியின் மகிழ்ச்சியில் வாழலாம். ஈஸா அல் மஸீஹ் யஃயா நபியை போல ஒரு துறவியல்ல. அதனால் அவர் தன்னுடைய சகாக்களோடு ஒரு கல்யாண விருந்துக்குச் சென்றதே ஒரு அற்புதம்தான். ஈஸா அல் மஸீஹ் தியானத்தையும் கடுமையான நோன்பையும் புறக்கணிக்கவில்லை, ஆனால் இவ்விதமான வாழ்க்கைமுறையினால் பெரிய பயனில்லை என்று கற்பித்தார். நம்முடைய கெட்டுப்போன இருதயம் புதிய தன்மையுள்ளதாக மாற்றப்பட வேண்டும், புதிய பிறப்பே அவசியம் என்பதை காண்பித்தார்.

இறை குமாரனும் மனுஷ குமாரனும்

(இன்ஜீல்) யோவான் 1:47-51 


47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். 48 அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். 49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். 51 பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 

ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய உள்ளான காரியங்களை அறிந்திருக்கிறார் என்பதைக் கண்ட நாத்தான்வேல் திகைப்புற்றான். முன்னைய வேதங்களின்படி நாத்தான்வேல் ஒரு முஃமினாக காணப்பட்டான். ஏனெனில் அவன் தன்னுடைய பாவங்களை ஸ்நானகனிடம் அறிக்கை செய்திருந்தான், இறைவனுடைய இராஜ்யம் வருவதற்கு முழுமனதுடன் காத்திருந்தான். இது அவனுடைய சுய நீதியான ஒரு செயலல்ல, தங்கள் பாவங்களினிமித்தம் மனமுடைந்து, இறைவன் தங்களுக்கு மஸீஹ் ஆகிய இரட்சகரை அனுப்ப வேண்டும் என்று கூப்பிடும் மக்களுடைய மனநிலை. ஈஸா அல் மஸீஹ் இந்த விண்ணப்பத்தைக் கேட்டார், ஒரு மர நிழலில் முழங்கால்படியிட்டு துஆ செய்யும் நபரையும் அவர் பார்த்தார். இவ்வாறு மனிதருக்குள்ளிருக்கும் காரியங்களை அறியும் சக்தி இறைவனுக்குரியது. ஈஸா அல் மஸீஹ் அவனைப் புறக்கணியாமல் நீதிமானாக்கினார். மஸீஹ்வின் வருகைக்காக எதிர்பார்த்திருக்கும் முன்தின வேதங்களின் முஃமீன்களுக்கு அவன் மாதிரியானவன் என்றும் குறிப்பிட்டார்.

மஸீஹ் அண்டை வந்து பாருங்கள்

யோவான் 1:43-46 


43 மறுநாளிலே ஈஸா அல் மஸீஹ் கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு: நீ எனக்குப் பின்சென்றுவா என்றார். 44 பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். 45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய ஈஸா அல் மஸீஹ்வே என்றான். 46 அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.

 

இதற்கு முந்திய வசனங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற சம்பங்களை நாம் பார்க்கிறோம். முதல் நாளில் எருசலேமிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் வந்திருந்தார்கள்; இரண்டாவது நாளில் ஈஸா அல் மஸீஹ் இறைவனுடைய ஆட்டுக்குட்டி என்று நபி யஹ்யா அறிவித்தார்; மூன்றாவது நாளில் ஈஸா அல் மஸீஹ் நான்கு சீஷர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். நான்காவது நாளில் பிலிப்பையும் நாத்தான்வேலையும் சீஷர்களுடைய வட்டாரத்திற்குள் அழைத்தார்.

போதை பொருளும் மதுபானமும்

tuticorin-boys

இஸ்லாமிய நாடுகளில் அநேக வாலிப யுவதிகள் போதை போருட்களுக்கும் மதுபானத்துக்கும் அடிமையாகி வாழ்கிறார்கள். இஸ்லாம் இவற்றை தடைசெய்துள்ளது. ஆனாலும் 100 வீதம் இஸ்லாமியர் வாழும் நாடுகளில் அநேக வாலிப யுவதிகள் போதை பொருளுக்கு அடிமையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

 

போலத் தனது இளவயதில் தன் தந்தை எப்படி குடி போதையால் தன் சொத்துக்ளையெல்லாம் அழித்தார் என்பதை நன்றாக அவதானித்து, தன் வாழ்வில் தான் அப்படியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

 

ஒரு வாலிப மருத்துவனாக பணியாற்றிய அவனை சக ஊழியர்களின் வற்புறுத்துதலினால் ஒரு கப் விஸ்கி பருகினான். நாலடைவில் அவனை அறியாமலேயே மதுபானம் இல்லாமல் அவனால் வேலையில் ஆர்வம் காட்ட முடியவில்லை.

 

சிறிது காலத்தில் தன் வேலையை இழக்கவேண்டி ஏற்பட்டது. குடும்பம் நடுவீதிக்கு வந்தது. தன் தந்தையை விடவும் போலத் மோசமான நிலைமைக்கு வந்துவிட்டான்.

 

அவன் மனைவிக்கு கிறிஸ்த ஊழியர்களின் தொடர்ப்பு கிடைத்தது. உண்மை கிறிஸ்தவர்கள் அடிமைத்தனத் திலும் நெருக்கத்திலும் உள்ளவர்களை ஆதரித்து உதவிகள் செய்து அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியேற உதவுவார்கள் என்பதை அவள் அறிந்து, அப்படி சிகிச்சை கொடுக்கும் ஒரு கிறிஸ்த வீட்டுக்கு தன் கணவரை அழைத்துச் சென்றாள். இப்பொழுது போலத் விடுதலையின் பாதையில் இருக்கிறான்.

 

துஆ

 

  1. போலத் போன்ற இஸ்லாமிய வாலிபர்கள் கிறிஸ்துவின் விடுதலையை நோக்கி செல்லும் பாதையில் நின்று தங்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்களுக்காக துஆ செய்வோம்.
  2. போதைக்கு அடிமையான வாலிபர்கள் இருக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்காக துஆ செய்வோம்.
  3. போதை பொருளுக்கு அடிமையானவர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் தேவ மனிதர்களுக்காகவும் அவர்கள் தேவைகளை இறைவன் சந்திக்கவேண்டும் என்றும் துஆ செய்வோம்.

பெரேலி முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.

20_-Bareilly-Jn-Railway-station

பெரேலி நகரமானது உத்தரா பிரதேசத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாகும். ஏழு ஆறுகள் அங்கே உண்டு. ஆனாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதில்லை. வாலிபர்களை தொழில் ரீதியாக கவர்ந்து ஈர்க்கும் இந்த பெரேலியில் முஸ்லீம்கள் அநேகமாக தங்கள் சொந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.

 

இங்கு வசிக்கும் 35 வீதமான முஸ்லீம்களின் குடியிருப்பு நகர மத்தியில் அமைந்து, அவர்களின் வளர்ச்சியும் அதிகரிக்க, இந்துக்களின் குடியிருப்புக்கள் நகரத்துக்கு வெளியாக அமைந்துவிட்டது. இதனால் இனவாத குழுக்களிடையே பிளவுகள் அதிகரித்து, அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது. இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியிலும் மத ரீதியான சண்டைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

துஆ

  • பெரேலி முஸ்லீம்கள் மத்தியில் ஊழியம் செய்ய அநேக கிறிஸ்தவர்கள் இறை தரிசனத்தை பெற துஆ செய்வோம்.
  • தற்பொழுது ஊழியம் செய்து கொண்டிருக்கிறவர்களின் பாதுகாப்புக்காவும், ஆவிக்குறிய மற்றும் சரீர தேவைகளுக்காகவும் துஆ செய்வோம்.
  • ஈஸாவை ஈமான் கொண்ட பெரேலி முஸ்லீம்கள் தங்கள் இனத்தவர்களுக்கு சத்தியத்தை சொல்லவும், அவர்கள் மத்தியில் சபை ஸ்தாபிக்கவும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலை பெறவேண்டும் என்று துஆ செய்வோம்.
  • புதிய விசுவாசிகளின் பாதுகாப்புக்காவும் அவர்களை வழிநடாத்துகிறவர்களின் பாதுகாப்புக்காகவும் துஆ செய்வோம்.

என் அழு குரலைக் கேட்க யாராவது இருக்கிறார்களா?

Saudi women

 

சமீராவின் வீட்டில் அவளின் தாய் கடும் வியாதியால் பாதிக்கப்பட்டு பௌவீனமடைந்தாள். இதனால் சமீராவின் வீட்டிலுள்ள அனைவரும் துயரத்தில் வாடிக்கொண்டிருந்தனர். மூடுபனி அக்குடும்பத்தை சூழ்ந்துக் கொண்டது. சமீராவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல வில்லை. அவளின் தாயின் வியாகுல நிலையையும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

 

சமீராவின் தாயாரின் மரணத்தின் பின் எல்லோரும் அமைதியாக துக்கம் கொண்டாடினார்கள். தன் தாய்க்கு என்ன நடந்தது என்ற உண்மையை அவளால் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. யாரும் அது குறித்து அவளுடன் பெசவேயில்லை. “என் அழு குரலைக் கேட்க யாராவது இருக்கிறார்களா?” என்று தனக்குள் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள் சமீரா.

 

இப்படிப் பட்ட அநேக வேதனையான சம்பவங்கள் சவுதி அரேபியாவில் நாளார்ந்தம் நடக்கின்றது. இஸ்லாமியரைப் பொருத்தமட்டில் இறைவன் அதிக தூரத்தில் இருப்பதால் தனிப்பட்ட முறையில் தன் மீது எவ்வாறு கரிசனைக் கொள்வார் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஈஸா அல் மஸீஹ்வை ஈஸா நபியாகவே இவர்கள் கருதுவதால் அவளை தன்னுடைய இரட்சகராகவும் நண்பராகவும் அறிந்து கொண்டவர்கள் சவுதி அரேபியாவில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே!

 

துஆ

  • சவுதியில் தனிமையில் துயரப்படுகிற ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஈஸா அல் மஸீஹ்வை கண்டுகொள்ள வேண்டும் என்று துஆ செய்வோம்.
  • ஈஸா அல் மஸீஹ்வை ஈமான் கொண்ட சவுதி மக்களுக்காக துஆ செய்வோம். அவர்கள் பெற்றுக்கொண்ட இறை பிரசன்னத்தில் அவர்கள் குடும்பத்தார்களையும் வழிநடத்த வேண்டும் என்று துஆ செய்வோம்.
  • சவுதி அரேபிய மக்களுக்கு சத்தியத்தை அறிவிக்க இறைவனால் தெரிவு செய்யப்பட்ட இறை மனிதர்களுக்காகவும் அவர்கள் குடும்பங்களின் பாதுகாப்புக்காகவும் துஆ செய்வோம்.

முஸ்லீம் முதியோருக்காக துஆ செய்வோம்.

dr. illyas

 

பொதுவாக இஸ்லாமிய கலாச்சாரத்தில் தீர்மானங்களை எடுப்பவர்கள் கோத்திர தலைவர்களாக இருந்துள்ளதை சரித்திர ரீதியாக பார்க்க முடிகிறது. கோத்திர தலைவன் இஸ்லாத்தை தழுவும்போது முழு கோத்திரமும் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள்.

 

அதேபோல் கோத்திர முறைமை மறைந்து வரும் இந்த காலத்தில் குடும்பத்தில் முக்கிய தீர்மானங்களை எடுப்பவர்கள் முதியவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

 

எனது தாயாரின் குடும்பத்தில் ஒன்பது சகோதர சகோதரிகள். அவர்களின் 24 பிள்ளைகளின் பிள்ளைகள் என்று குடும்பம் பெருகிக்கொண்டே போகிறது. எங்கள் மூத்தம்மாவின் கணவர் தான் இப்போதைக்கு குடும்பத்தில் பெரியவர். அவர் சொல்தான் எமது குடும்பத்தின் மந்திர சொல்லாக இருக்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எவ்வளவு மோசமானது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவருடைய வார்த்தையை விரும்பாவிட்டாலும் யாரும் அவருக்கு முன்னால் எதிர்த்து பேசமாட்டார்கள்.

 

துஆ

 

  • இஸ்லாமிய குடும்ப தலைவர்கள் சத்தியத்தை அறிய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்று துஆச் செய்வோம்.

 

  • ஈஸா அல் மஸீஹ்வை ஈமான்கொண்டுள்ள முதியோர்கள் தங்களின் சாட்சியை தங்கள் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ள பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறவேண்டும் என்று துஆ செய்வோம்.

 

 

  • கிறிஸ்த முதியோர் தைரியமாக இஸ்லாமிய முதியோருக்கு சத்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று துஆ செய்வோம்.

இலங்கை முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.

musulmans-du-Sri-Lanka

 

 

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தால் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 2012ம் ஆண்டுதான் நாடளாவிய சனத்தொகை கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது. 1981ம் ஆண்டு சனதொகை கணக்கெடுப்பில் 7.64வீதமாக (1,134556) இருந்த முஸ்லீம்கள் புதிய கணக்கெடுப்பில் 9.71வீதமாக (1,967,227) வளர்ச்சியடைந்திருந்தனர். மதமாற்றங்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு பெரும்பான்மையான பெளத்தர்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது. பௌத்த அடிப்படைவாதிகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் இடையில் ஒரு முறுகள் நிலையே உள்ளது.

 

 

 

துஆ குறிப்புகள்

 

  1. அடிப்படைவாத மோதல்களால் பாதிப்புக்குள்ளாகின்ற இளைய சமுதாயத்தை இறைவன் காக்கவும். அவர்களுக்கு சுவிசேஷத்தை செவிமடுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றும் துஆ செய்வோம்.
  2. இலங்கை திருச்சபைகள் இஸ்லாமியரை நேசிக்கவும் அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை காண்பிக்க முன்வரவேண்டும் என்றும் துஆ செய்வோம்.

 

3.                    இஸ்லாமிய பின்னணியில் இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவுக்குள் சரியான முறையில் வளரவும் தாங்கள் பெற்றுக்கொண்ட இரட்சிப்பின் அனுபவத்தை தங்கள் இனத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரின் பெலன் கிடைக்க துஆ செய்வோம்.

 

4.              புது விசுவாசிகள் முகம் கொடுக்கும் சவால்களின்போது கிறிஸ்தவ சபை அவர்களை புரிந்துகொண்டு சரியான முறையில் வழிநடாத்த இறைவன் வழிகாட்ட வேண்டும் என்று துஆ செய்வோம்.

 

5.            இஸ்லாமியர் மத்தியில் ஊழியம் செய்கின்றவர்களின் பாதுகாப்புக்காகவும் ஒற்றுமைக்காகவும் பொருளாதார தேவைகளுக்காகவும் துஆ செய்வோம்.

 

ஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின்.

ஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின்.

 

யோவான் 1:40-42 


40 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப்பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.

பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா, திபேரியாக் கடற்கரைக் கிராமமாகிய பெத்சாயிதாவிலுள்ள ஒரு மீனவன். பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானத்தைப் பெறுவதற்காகவும், மேசியாவின் வருகைக்காக காத்திருப்பதற்காகவும் அவர் ஸ்நானகனிடத்தில் வந்திருந்தார். அவருடைய இருதயம் மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது; அவர் முதலில் கண்டுகொண்டதை தன்னோடு வைத்திருக்க அவரால் முடியவில்லை. அவர் அந்நியர்களிடம் அதை அறிவிக்காமல் முதலில் தன்னுடைய சகோதரனைத் தேடுகிறார். ஆகவே, தன்னுடைய ஆர்வம் மிகுந்த சகோதரனாகிய பேதுருவைப் பார்த்து, அந்திரேயா நற்செய்தியைச் சொல்லுகிறார், நாங்கள் வாக்குப்பண்ணப்பட்ட மஸீஹ்வை, இரட்சகரைக் கண்டோம், அவர் ரப்புவும் இறை ஆட்டுக்குட்டியுமானவர். பேதுருவுக்கு ஒருவேளை சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அந்திரேயா அவரை நம்பவைக்கிறார். அதன்பிறகு, பேதுருவும் சற்றுத் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டு ஈஸா அல் மஸீஹிடம் செல்கிறார்.

 

பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோது, ஈஸா அல் மஸீஹ் பேதுருவைப் பெயர்சொல்லி அழைத்தார். ஈஸா அல் மஸீஹ் பேதுருவின் மனதில் இருந்த காரியங்களை அறிந்தவராக அவருக்கு பாறை என்ற ஒரு பட்டப்பெயரைக் கொடுக்கிறார். ஈஸா அல் மஸீஹ் அவருடைய இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும் அவருடைய துடுக்குத்தனத்தையும் அறிந்திருந்தார். ஈஸா அல் மஸீஹுக்கு அனைத்து இருதயங்களையும் தெரியும், அவை அவருக்கு முன்பாக திறந்தவைகளாகக் காணப்படுகின்றன. பேதுரு புரிந்துகொண்டு, ஈஸா அல் மஸீஹ்வின் பார்வையிலேயே அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டார். இந்த படிப்பறிவில்லாத மீனவனை ஈஸா அல் மஸீஹ் பொறுமையோடு ஒரு உறுதியான பாறையாக மாற்றினார். மஸீஹ்வில் அவர் ஜமாஅத்தின் அடித்தளமானார். ஆகவே ஒருவகையில் ஆரம்பப்பணியைச் செய்த சீஷன் அந்திரேயாதான்.

 

இன்னொரு சீஷனும் தன்னுடைய சொந்த சகோதரனை மஸீஹ்வினிடத்தில் வழிநடத்தினார். யோவான் தன்னுடைய சகோதரனாகிய யாக்கோபை ஈஸாவினிடத்தில் வழிநடத்தினார். ஆனால் தாழ்மையின் காரணமாக இந்த இரண்டு பெயர்களையும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. உண்மையில் யோவானும் அந்திரேயாவும்தான் காலத்தின்படி பார்த்தால் முதல் சீஷர்கள்.

 

இந்த அறிமுக வசனங்களின் அழகை ஒரு சூரிய உதயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆம் இது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம். இந்த சீஷர்கள் சுயநலமற்றவர்களாக தங்களுடைய சகோதரர்களை மஸீஹ்விடம் நடத்தினார்கள். இந்தக் காலத்தில் அவர்கள் வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்து நற்செய்தியறிவிக்கவில்லை, தங்களுடைய உறவினர்களை மஸீஹ்விடம் நடத்தினார்கள். அவர்கள் நம்பிக்கை கற்றவர்களையோ அரசியல்வாதிகளையோ தேடாமல், உடைந்த இருதயத்தோடும் மனந்திரும்புதலோடும் இறைவன்மேல் பசிதாகமுள்ளவர்களைத் தேடினார்கள். இவ்வாறு ரஹ்மத்தின் நற்செய்தியை, அளவுக்கதிகமான வைராக்கியத்தினால் அல்ல, ஈஸாவுடனுள்ள தொடர்பிலிருந்து வரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். இந்த ஆரம்ப சீஷர்கள் ஒரு மத்ரஸாவை நிறுவவில்லை, தங்களுடைய சுயசரிதையையும் எழுதவில்லை, தங்களுடைய அனுபவத்தின் சாட்சியை தங்கள் வாயின் வார்த்தையினால் அறிவித்தார்கள். யோவான் ஈஸா அல் மஸீஹ்வைப் பார்த்தார், அவர் பேசியதைக் கேட்டார், அவரைத் தொட்டார், அவரை நம்பினார். இந்த நெருக்கமான உறவிலிருந்துதான் அவர்களுடைய அதிகாரம் பிறந்தது. ஈஸா அல் மஸீஹ்வை அவருடைய நற்செய்தியில் நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? உங்களுடைய நண்பர்களை பொறுமையுடனும் வெற்றியுடனும் கிறிஸ்துவிடம் நடத்தியிருக்கிறீர்களா?

 

துஆ:

எங்கள் இறைவா ஈஸாவே, எங்கள் உள்ளத்திலுள்ள சந்தோஷத்திற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உம்முடைய ஐக்கியத்தின் இனிமையினால் நீர் எங்களை அசைத்து, மற்றவர்களையும் நாங்கள் உம்மிடத்தில் வழிநடத்தும்படி எங்களுக்கு அருள்செய்வாயாக. அன்பினால் நற்செய்தியறிவிக்கும் தூண்டுதலை எங்களுக்குத் தருவாயாக. உமக்கு நாங்கள் தைரியமாக சாட்சிபகரும்படி, எங்களுடைய கோழைத்தனத்தையும் வெட்கத்தையும் எங்களுக்கு மன்னிப்பாயாக.

உங்கள் ஆன்மாவில் மஸீஹின் ஒளி பிரகாசித்திருக்கிறதா?

உங்கள் ஆன்மாவில் மஸீஹின் ஒளி பிரகாசித்திருக்கிறதா?


யோவான் 1:35-39
35 மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, 36 இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவஆட்டுக்குட்டி என்றான். 37 அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். 38 இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 39 அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.

 

ஈஸா அல் மஸீஹ் மாம்சத்தில் வந்த இறைவனுடைய வார்த்தை, அவரே இறைவன், அவரே வாழ்வும், ஒளியின் ஆதாரமுமானவர். இவ்வாறுதான் அவரை யஹ்யா நபி விளக்கியிருக்கிறார். மேலும் ஈஸா அல் மஸீஹின் ஊழியத்தையும் செயல்களையும்கூட விளக்கியிருக்கிறார். அவரே அனைத்தையும் படைத்துப் பராமரிப்பவர். இறைவனை அன்புள்ள தகப்பனாக அறியும் புதிய அறிவை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த அடிப்படைக் கருத்தின்படி, அவருடைய தன்மைகள் அனைத்தையும் தொகுத்துக் கூறும் விதமாக, மீண்டும் இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றும் குறிப்பிடுகிறார். 14ம் வசனத்தில் மஸீஹ்வின் அடிப்படைத் தன்மையையும் ஆதாரத்தையும் விளக்குகிறார், 29 மற்றும் 33 ஆகிய வசனங்களில் மஸீஹின் சேவையின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

என் தாயாரின் கபுரடிக்குச் செல்லும் வழியில் கார் ஓட்டுனருடன்…

 

என் தாயார் மரித்து சில நாட்கள் ஆனது. அவரது அடக்கஸ்தளத்தை காண நான் முதல்  முறையாகச் சென்றேன். என்னோடு ராதி என்ற என் நண்பரும் வந்தார். நாங்கள் ஒரு காரை வாடகைக்கு வைத்துக்கொண்டுச் சென்றோம். அந்த காரின் ஓட்டுனர், எங்களோடு அரசியல் பற்றி பேசிக்கொண்டே வந்தார்.

 

இந்த கார் ஓட்டுனர் படித்தவர் என்பதை நான் அறிந்துக்கொண்டேன். ஒரு பள்ளியில் தான் ஒரு சமூக சேவகனாக வேலை பார்ப்பதாகவும், தன்னுடைய வருமானம் போதுமானதாக இல்லாத காரணத்தால் பகுதி நேரமாக இப்படி கார் ஓட்டுனராக வேலை செய்வதாகவும் அவர் கூறினார். 

 

நான் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு (PhD) படிக்க ஆரம்பித்த நாளிலிருந்து என் நண்பர் “ராதி” என்னை “டாக்டர்” என்றே அழைப்பார். இவர் என்னுடைய இன்னொரு நண்பரிடம் வேலை பார்க்கிறார். இவரைப் பற்றி அதிகம் அறியவேண்டும் என்று இந்த ஓட்டுனர் மிகவும் ஆர்வமாக இருந்தார். என்னிடம் இந்த ஓட்டுனர் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். நான் சுருக்கமாக மட்டும் பதில் அளித்துக்கொண்டு இருந்தேன்.

ரூஹுல் குத்தூசினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா?

யோவான் 1:31-34 


31 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான். 32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். 33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.

 

நபி யஹ்யாவுடைய முப்பதாவது வயதில் இறைவன் அவரை அழைத்து, மஸீஹ்வுக்கு வழியை ஆயத்தப்படுத்தவும் மக்களுக்கு அவரைத் தெரியப்படுத்தவும் அனுப்பினார். இது அவருடைய ஞானஸ்நான சமயத்தில் நடைபெற்றது, அப்போது மனந்திரும்பிய மக்கள் மஸீஹ்வின் வருகைக்கு ஆயத்தமாக அவரை வரவேற்கத் தயாராக இருந்தனர். இதுவரை யாரும் கண்டிராத காட்சியை யஹ்யா பார்ப்பார் என்று இறைவன் அவருடன் பேசி வாக்குப் பண்ணியிருந்தார். ரூஹஹுல் குத்தூஸ் மஸீஹ்வின் மீது இறங்கும் காட்சியே அது. பரிசுத்த ஆவியானவர் (ரூஹஹுல் குத்தூஸ்) ஈஸா அல் மஸீஹ்வின் மேல் தங்கினார் என்பதுதான் கவனிக்கத்தக்கது. பழைய ஏற்பாட்டு நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட காலம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசினார்கள், ஆனால் ஈஸா அல் மஸீஹ்வோ நிரந்தரமாக ரூஹுல் குத்தூசினால் நிறைந்திருந்தார். அடிக்கடிவரும் வசந்த காலம் போல ஆவியானவர் விசுவாசிகளை தெய்வீக வல்லமையினால் நிரப்புவார்.

மஸீஹ்வை குறித்து மேலும் ஊக்கமளிக்கும் யஹ்யா நபியின் ஷஹாதா

________________________________________
யோவான் 1:29-30

29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

எருசலேமிற்குத் திரும்பிய பிரதிநிதிகள், யஹ்யா நபியைக் குறித்த தங்களுடைய வெறுப்புணர்ச்சியை அப்படியே வைத்து வைத்திருந்தார்கள். அந்தத் தருணம் வரையில் மஸீஹ் தம்முடைய மக்களை படைத்துத் தூய்மைசெய்யும் ஒரு சீர்திருத்தவாதி என்று யஹ்யா நபி நினைத்திருந்தார். மஸீஹாகிய ரப்புல் ஆலமீன் நோயுற்ற மரத்தை வெட்டியெறியும் கோடரி என்று எண்ணினார். இவ்வாறு மஸீஹ்வின் வருகை இறைவனுடைய கோபத்தின் நாளை அறிவிக்கிறது. மஸீஹ் நம் நடுவில் இருக்கிறார் என்று அவர் சொன்னதும் அவரை பின்பற்றியவர்கள் தங்களுடைய பாவங்களை நினைத்து மனவேதனையடைந்தார்கள். நியாயத்தீர்ப்பாகிய இடி எச்சரிப்பின்றி அவர்கள் நடுவில் விழும் என்று அவர்கள் கருதினார்கள்.

ரப்புல் ஆலமீன் எவ்வாறு சாதாரண மனிதராயிருக்க முடியும்?

யோவான் 1:25-28 


25 அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். 26 யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். 27 அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். 28 இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.

 

யஹுதிகள் தவ்ராத்திலிருந்து வுழுசெய்தல், மேனியைக் கழுவுதல் மற்றும் ஒரு வகையான குளியல் ஆகியவற்றைக் கற்றிருந்தார்கள். மேனியைக் கழுவும் சடங்கு ஒழுக்க ரீதியாக ஏற்பட்ட அசுத்தத்தை நீக்குவதாகும். ஆனால் ஞானஸ்நானம் என்பது யஹுதியல்லாதவரை சுத்திகரிப்பதாகும். யூதரல்லா தவர்கள் தூய்மையற்றவர்கள் என்றே அவர்கள் கருதினார்கள். எப்படியிருந்தாலும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வது தாழ்மைக்கும் இறைவனுடைய சமுதாயத்தில் சேர்ந்து கொள்ளுவதற்கும் அடையாளமாகும்.

 

ஜெருசலேமிலிருந்து வந்தவர்கள் குழப்பமடைய காரணம் என்ன?

ரப்புல் ஆலமீனுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் நபி யஹ்யா

யோவான் 1:22-24 

22 அவர்கள் பின்னும் அவனை நோக்கிநீர் யார்?எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவுசொல்லும்படிக்குஉம்மைக்குறித்து   என்னசொல்லுகிறீர் என்று கேட்டார்கள். 23 அதற்கு   அவன்:  கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்றுஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே,       நான்வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடையசத்தமாயிருக்கிறேன் என்றான். 24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
 
அனுப்பப்பட்டவர்கள் யஹ்யா நபியை நோக்கி  கேள்விக்கனைகளைத்  தொடுத்துக் கொண்டிருந்தார்கள். மஸீஹ்வின் மெய்யான  வருகைக்கு  முன்பாக  வரும்  என்று  அவர்கள்  எதிர்பார்த்த தவறான  உபதேசங்களைப்  பற்றியதாகவே  இந்தக்  கேள்விகள் காணப்பட்டது. ஆனால் யஹ்யா நபி தான் மஸீஹ் அவர்களும் அல்ல, இல்யாஸ் நபியும் அல்ல, முஸா நபியால் முன்னுரைக்கப்பட்ட நபியும் நானல்ல  என்று  கூறியதால், அவர்களுடைய  பார்வையில்  அவர்  தன்னுடைய முக்கியத்துவத்தையும்  ஆர்வத்தையும் இழந்தார். ஆயினும்  அவர்கள் அவர்  யார்  என்றும்  அவருடைய  செய்தியை  கொடுத்தது  யார்  என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  சூழ்நிலையை  முழுவதும் அறிந்துகொள்ளாமல்  தங்களை  அனுப்பியவர்களிடம்  திரும்பச் செல்லக்கூடாது  என்பதுதான்  அவர்களுடைய  நோக்கமாயிருந்தது. 
 

நீ ஷரீஆவையும் அகீதாவையும் படித்திருக்கிறாயா?

யஹ்யா நபியவர்களிடம் கேற்கப்பட்ட கேள்விகள்


யோவான் 1:19-21


19 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, 20 அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். 21 அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு : நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.

 

யஹ்யா நபியை மையமாக வைத்து யோர்தான் பள்ளத்தக்கில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆயிரக் கணக்கானவர்கள் வனாந்தரமான பாதைகளில் அச்சமின்றி நடந்து, உயர்ந்த மலைகளிலிருந்து வறட்சியான பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள். அவர்கள் புதிய நபியின் குரலைக் கேட்கவும் தங்கள் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறவும் யஹ்யா நபியிடம் வந்தார்கள். இந்த மக்கள் கூட்டம் ஜாஹிலிய்யர்கள் என்றே பெருமையுள்ளவர்கள் பெரும்பாலும் கருதினார்கள். ஆனால் அவர்கள் தெய்வீக வழிநடத்துதலை ஆவலுடன் நாடுபவர்கள். அதிகாரத்தையும் வல்லமையையும் பெற்றிருப்பவர்களை அவர்கள் சீக்கிரத்தில் அடையாளம் கண்டுகொள்வார்கள். அவர்கள் மதச் சடங்குகளை பற்றியோ ஷரீஆவைப் பற்றியோ கேட்க விரும்பவில்லை, அவர்கள் இறைவனைச் சந்திக்க விரும்பினார்கள். இந்த எழுப்புதலைக் குறித்து யூதர்களின் நீதிமன்றமான சனகதரின் அறிந்துகொண்டது. கொர்பானி செலுத்தப்படும் மிருகங்களை அறுக்கும் கடினமான உதவிக்காரர்களாகிய சில ஆசாரியர்களை அவர்கள் அனுப்பினார்கள். யஹ்யா நபியவர்களின் தஃவாவில் இணைவைப்பு காணப்பட்டால் அவரை கொலைசெய்வதே அவர்களின் பணியாகயிருந்தது.