About us
அழைப்பு
அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஏக இறைவன் எம்மீது ஒரு பெரிதான கடமையைசுமத்தியுள்ளான். அதாவது ஏக இறைவனிடம்சென்றடையும் வழியை எமது சமுதாயத்திற்குகாண்பிப்பதாகும். இது மிகவும் சவால்மிக்க கடமையாகஇருந்தாலும், சத்தியத்தை தேடுவதில் உங்களைப்போல்ஆர்வமுள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வது மிகவும்இலகுவான காரியமாகும்.
இன்ஜில் வேதத்தில் இவ்வாறு ஒரு கதை உள்ளது. “ஒருமேய்ப்பன் இருந்தான். அவனிடம் 100 ஆடுகள் இருந்தது.ஒரு நாள் அதில் ஒன்று கானாமற் போய்விட்டது. அந்தமேய்ப்பனோ மிகவும் கவலைக்கொண்டவனாய், 99ஆடுகளையும் விட்டுவிட்டு, கானாமற்போன ஒருஆட்டை தேடிக்கொண்டு சென்றான். அவன் அதைதேடிப்பிடித்ததும் மிகவும் சந்தோஷத்தோடுகூட அந்தஆட்டை தோளில் போட்டுக் கொண்டு, தன் இருப்பிடம்நாடி வந்தான்.” இவ்வாறுதான் இறைவனும் தான் படைத்தமனிதன் வழிவிலகிச் செல்லும்போது, அவனைத் தேடிக்கண்டுபிடித்து தனது ஜமாஅத்துக்குள் சேர்த்துக்கொள்கிறான். இதைத்தான் எமக்கூடாகவும் இறைவன்செய்கிறான். பல வருடங்களின் பின்னரும் உங்களைத்தேடுகிறான் என்றால் பாருங்களேன்!.
மேலும் சத்தியத்தை தேடும் பணியில் தொடர்ந்தும்நாங்கள் ஈடுபடுவோம். உங்கள் கேள்விகள் சந்தேகங்களைஎங்களுக்கு எழுதுங்கள். பதில் எழுத ஆயத்தமாகஉள்ளோம். “இறைவா, எங்களுக்கு நேரான வழியைகாட்டுவாயாக” என்ற துஆ எப்பொழுதும் எங்கள்உதடுகளில் ஒலிக்கட்டும்.
எங்கள் ஆக்கங்களை இங்கே பதிவு செய்கிறோம்.வாசித்து உங்கள் விமர்சனங்களை எங்களுக்குஎழுதுங்கள்.
இப்படிக்கு உங்கள் நண்பன்
இறைநேசன்
Leave a Reply