Archives: ஆக்கங்கள்

இறை புத்திரனை  ஈமான் கொள்வதா?

Psalm 118-23

JOHN 3:17-21

யோவான் 3:17 – 21

17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

 

யஹ்யா நபி  தன்னுடைய தேசத்திலிருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி, மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் மஸீஹ்வை குறித்துப் பயான் செய்தார். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவிடம் பேசும்போது தான் நெருப்பினால் சுட்டெரிப் பதற்கு வராமல் இரட்சிப்பதற்காக வந்ததாகக் கூறுகிறார். நம்முடைய இரட்சகர் இரக்கமுள்ளவர். யஹ்யா நபியின் பதிலாள் பிராயச்சித்தத்தின் இரகசியத்தை அறிந்து கொண்ட போது, ஈஸா அல் மஸீஹ்வை உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டி என்று அழைத்தார்.

 

இறைவன் தம்முடைய அன்பினால் தம்முடைய குமாரன் யூதர்களுக்காக மட்டும் அனுப்பாமல், உலகத்திற்காக அனுப்பினார். 17ம் வசனத்தில் உலகம் என்ற வார்த்தை மூன்று முறை இடம்பெறுகிறது. புறவினத்து மக்களை நாய்களைப் போல நடத்திய யூதர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இறைவன் இப்ராஹிம் நபியின் சந்ததியை நேசிப்பதைப் போலவே அனைத்து இனங்களையும் நேசித்தார். எல்லோரும் நியாய தீர்ப்பிற்கு பாத்திரவான்களாயிருக்கிறார்கள். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நியாயம் தீர்க்கவராமல் மக்களை இரட்சிக்க வந்தார். அவர் உலகத்தின் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை சிலுவையில் சுமப்பதன் மூலமாக உயர்த்தப்பட்ட சர்ப்பத்தின் உருவகத்தை நிறைவேற்றுகிறவர் என்பதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். இறைவனுடைய அன்புக்கு இனப்பாகுபாடு கிடையாது, அது அனைத்து மக்களுக்கும் உரியது.

இறைவனின் முகத்தைத் தேடுகிறீர்களா? அல்லது கரங்களை மட்டும் பார்க்கின்றீர்களா?

நாளாகமம் 7 14

“நாடு இப்படியே போச்சினா நம்ம பசங்கள்ட எதிர்காலம் என்னாவது!”

“இந்த நாட்டுல தொடர்ந்து வாழ்ந்தா நம்ம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். US போற வழிய தேடணும்”

இப்படியான கருத்துக்கள் எமது சமுதாயத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. எதற்கு எடுத்தாலும் நாட்டையும் நாட்டை ஆள்கிறவர்களையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இப்படி குறை சொல்லி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த பலர், கலாச்சாரப் பிரச்சினைகளால் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் “ஏன் திரும்ப வந்துவிட்டீகள் என்று கேட்டால், “அந்த கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது, என் பையனையே எனக்கு திட்ட முடியல, உடனேயே அவன் பொலிஸுக்கு போன் செய்கிறான் என்று குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்ட வேதனையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளிலிருந்து விடுபட, நான் வெளிநாடு போக முயற்சித்தேன். அப்பொழுது ஒரு தங்கை கூறினாள், “பிரச்சினை உங்களுக்குள் இருந்தால் அது எங்கு சென்றாலும் உங்களுடன் வரும் என்று. அந்த வார்த்தைகள் என்னை சிந்திக்கவைத்தது. எனது வெளிநாட்டு பயண எண்ணத்தை கைவிட்டேன். தொடர்ந்து போராடி இறை அருளால் அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியேறினேன்.

நாடு சீரழிந்துள்ளது என்று வேதனையில் இருக்கும் இறைவனுடைய பிள்ளைகளுக்கு இறைவன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 2நாளாகமம் 7:14ம் வசனத்தில் இறைவன் இப்படிச் சொல்கிறார்.

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

சிலுவை குர்பான் மறுதலிப்பு! – இஸ்லாமியரின் இரட்சிப்பு இழப்பு!

ஆசிரியர்: அஸ்கர்

‘ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும்  இருக்கிறேன். பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. (ஸூரா 3:55 பி ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)

முன்னுரை: 

ஈஸ்டர் பெருநாள் இறைவேதம் குறிப்பிடுவது போல, ஈஸா அல் மஸீஹ்வைப் பின்பற்றும் எவருக்கும் மிக முக்கியமான ஒரு திருநாளாகும். இந்த பண்டிகையின்போது, மஸீஹ் ஆகிய ஈஸா சிலுவையில் குர்பானியாகி மரித்த சம்பவங்களை நினைவுகூர்வது மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. 1 கொரிந்தியர் 15:1-20 சொல்வது போல, இதுவே ஈஸ்டர் திருநாளின் மையப் பொருளாக இருக்கிறது.

அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்…கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,  கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.  அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், …கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா…கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்… கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

உண்மையின் வெளிச்சத்திற்கு

அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கடிதம் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். நானும் என் குடும்பத்தாரும் சந்தோஷமாக, அல்லாஹ்வின் ரஹ்மத்தோடு வாழ்ந்து வருகிறோம். உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் குடும்பத்தாரின் சுகத்துக்காகவும் அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன்.

உங்களின் விடாமுயற்சி எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இறை வேதம் கூறுகிறது:   “சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”. உங்கள் மீது அல்லாஹ் மட்டில்லாத அன்பு வைத்துள்ளான் என்பதை நான் உணர்கிறேன். இதனால் தான் கடந்த 7 மாதங்களாக எமது உறவு தொடர்ந்து வருகிறது.

சென்றவாரம் பிஜே பற்றிய முஸ்லீம்களின் விமர்சனங்கள் சிலவற்றை படித்தேன். அதில் ஒரு கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. பிஜேயின் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்ற ஒருவர் பிஜேயைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “பிஜே எங்களோடு கதைத்துக்கொண்டிருக்கின்ற வேளைகளில் அடிக்கடி கூறுவார் ‘நான் அல்லாஹ் என்று ஒருவன் இல்லையென்று வாதாடினாலும் நான் தான் வெற்றிபெறுவேன்.’” நடுநிலை வகித்து இந்த கருத்தை பார்க்கும் பொழுது, பிஜே உண்மையை பேசியிருப்பது தெளிவாகின்றது. உண்மையில் இயற்கையாக விவாத திறமையுள்ளவர்கள் தர்க்கவியலிலும் புலமைப்பெற்றிருந்தால் எந்தவொரு பொய்யையும் மெய்ப்பிப்பது அவர்களுக்கு சர்வசாதாரணம்.

அல் ஹக் (சத்தியம்) என்பது நாவண்மையை சார்ந்திருப்பதல்ல. அதனை யாராலும் அழிக்கமுடியாது. அதனை பாதுகாக்க மனித பலமோ, ஜிஹாதோ தேவையுமில்லை. அல்லாஹ்வை மனிதர்கள் காப்பாற்றுவதற்கவே ஜிஹாத் என்று நினைக்கத்தோன்றுகிறது. ஏனென்றால் நாங்கள் ஹக்கை காப்பாற்றவே ஜிஹாத் செய்கின்றோம் என்று பறைசாட்டுவது அடிக்கடி எங்கள் காதுகளை எட்டுகிறது. இது நகைப்புக்குறிய காரியமாக இருந்தாலும் எனக்குள் மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. காரணம் ‘அல்லாஹ்வுக்காக காபிர்களை அழியுங்கள்’ என்ற போதனையில் மயங்கி, எமது இளம் சமுதாயம் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வது உலகலாவிய ரீதியில் பெருகிக்கொண்டே வருகிறது. இலங்கையில் முஸ்லீம்கள் முஸ்லீம்களை கூட ஜிஹாத் என்ற பெயாpல் கொலைசெய்த சம்பவங்களும் உங்களுக்குத் தெரியாமலிருக்காது. உதாரணமாக பேருவளை சம்பவம், பயில்வான் சம்பவங்களை கூறலாம்.

அல் ஹக் என்றால் இறைவன். இறைவனை அறிந்துக்கொள்ளுதல் என்பது இறைவனைப் பற்றி அறிந்துகொள்வதல்ல. இவ்விரண்டிற்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது. இறைவனைப் பற்றி அல்லது சத்தியத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள பெற்றோர் கூரிய காரியங்கள், பாடசாலையில் கற்ற காரியங்களை அறிஞர்களின் போதனைகள், இறைவனைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் எங்களுக்கு உதவி புரியலாம். இவற்றின் மீது எங்கள் நம்பிக்கை எனும் கட்டிடத்தை கட்டினால் மனலில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ஒப்பாகுவோம்.

இறைவனை அறிந்துகொள்வதென்பது, ஆதம் (அலை) எவ்வாறு இறைவனோடு உறவுவைத்திருந்தாரோ அதேபோன்று இறைவனோடு உறவு வைப்பதாகும். இலகுவாக விளங்கிக்கொள்ள கணவன் மனைவிக்கிடையில் இருக்கும் ஐக்கியத்தை ஒப்பிடலாம்;. அன்பு சகோதரனே, இது ‘இந்தப் பழத்தின் சுவை இப்படிப்பட்டதென்று’ நீங்கள் சாப்பிட்டில்லாத ஒரு பழத்தை குறித்து நான் விளக்கம் கொடுப்பது போன்று தோன்றுகின்றது. இதனால் தான் நீங்கள் எப்பொழுது முஸ்லிமானீர்கள் (இறைவனுக்கு உங்களை அர்ப்பணித்தீர்கள்) என்று கேட்டிருந்தேன். உங்களின் பதில் ‘இறைவனைப் பற்றி சில காhpயங்களை அறிந்துள்ளேன் என்றுதான் இருக்கின்றது. “குலில் ஹக்கு வலவ்கான முர்ரா” “கசப்பாக இருந்தாலும் உண்மையே பேசு”  என்ற பழமொழிக்கினங்க இந்த உண்மையை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளேன். அதாவது நீங்கள் (உண்மை) முஸ்லீம் அல்ல. ஆதம் நபியைப்போன்ற முஸ்லிம் அல்ல. இப்ராஹிம் நபியைப்போன்ற முஸ்லீம் அல்ல. மூஸா நபியைப் போன்ற முஸ்லீம் அல்ல.

ஒருவன் வளர்ப்பில் முஸ்லிமாவான் என்பதை யூசுப் கர்ளாவி போன்ற அறிஞர்களே ஏற்க மறுக்கின்றனர். ஒருவன் பருவவயதை அடைந்தவுடன் தன்னை அர்ப்பனிப்பதற்கூடாகவே ஒருவன் முஸ்லிமாவதாக கூறுகின்றனர். ஆகவே நீங்களும் உண்மை முஸ்லிமாக வேண்டும் எனும் அவாவிலேயே உங்களோடு கடித தொடர்ப்பை ஏற்படுத்தி, என்னால் முடிந்தவரை அல் ஹக்கை குறித்து உங்களுக்கு தெளிவுபடுத்த முற்படுகிறேன். ‘வல்ல நாயன் சத்தியத்தை (தன்னை) வெளிப்படுத்துவானாக’ ஆமீன்.

அன்பு சகோதரனே அல்;லாஹ்வுக்காக எதனையும் செய்ய எம்மால் முடியாது. ஆனால் அவனால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உண்மையாக தேடுவோருக்கு ஏக இறைவன் நிச்சயமாக நேர்வழி காட்டுவன். நேர்வழிபெற்ற உண்மை முஸ்லீம் கூட்டத்தில் உங்களையும் சேர்த்துக்கொள்வானாக.

இப்படிக்கு

உங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நண்பன்.

இறைநேசன்

இந்த சின்ன விஷயத்துக்கு போய்….

 

ScreenHunter_446 Sep. 10 16.51

பகுதி 1

எனது நண்பர் ஒருவரின் தந்தையாரை பாதை கடவையில் விபத்துக்குள்ளாக்கி, காலை முறித்த, பிரதான வங்கியொன்றின் உயர் அதிகாரி இப்படி சொன்னார் “இது ஒரு சின்ன விஷயம்தானே! இதுகு போய்….”

 

விபத்துக்குள்ளான தந்தைக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எப்படியிருக்கும் இந்த உயர் அதிகாரியின் பேச்சு என்று சிந்தித்துப் பாருங்கள். தண்டனை பெறவேண்டிய இந்த அதிகாரி தான் செய்த தவறை எவ்வளவு சூட்சமாக மறைக்கிறார் என்பதை உணரும் போது எப்படியிருக்கிறது. தான் தவறு செய்யவில்லையென்று நேரடியாக வாதாடமுடியாததால் இப்படியான சாதூர்யமான முறையில் தவறை மறைக்கிறவர்களாக பலரும் இருக்கின்றனர்.

 

ஒருமுறை எனது இன்னுமொரு நண்பர் தனது இரு சக்கர வண்டியில் பயணிக்கும்போது ஒரு பெண்ணின் கைப்பை அவர் வண்டியில் சிக்கியது. நண்பர் மீது தவறு இல்லாமல் இருந்தும் மனிதாபிமானமாக அவர் அந்த பெண்ணிடம் மன்னிப்புக்கோரினார். அதற்கு அந்த பெண்ணோ கெட்ட வார்த்தைகளால் எனது நண்பரை திட்டித்தீர்த்து விட்டார். அந்த கெட்ட வார்த்தைகள் காரணமாக, அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கொடுக்க என் நண்பருக்கு சில நாட்கள் சென்றதாக கூறினார்.

 

இந்த இரண்டு சம்பவங்களை பார்க்கும் போது, ஒருவர் தவறு செய்தும் அது தவறில்லை என்று மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கிறார். மற்றவர் தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்டு மன்னிக்கப்படாமல் இருக்கிறார். இவர்களில் யார் செய்தது சரியானது என்று பார்ப்பதல்ல இந்த கட்டுரையின் நோக்கம். நாங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்பதே நோக்கமாகும்.

ஆலோசனை என்றால் என்ன?

ஆலோசனை என்றால் என்ன?

 

images.jpg council

 

தீர்வை தேடி மருத்துவரிடம் செல்வதற்கு பலரும் யோசிப்பார்கள். ஆனால் இது ஒரு ஆய்வின் ஒரு பகுதி மாத்திரமேயாகும். மருத்துவர் முன்வைக்கின்ற புத்தகத்தில் பெற்றுகொள்ளமுடியாத காரியம் அனுபவமாகும்.  

அநேக போலியான கருத்துக்கள் உள்ளன.

நீங்கள் இந்த கலாச்சாரத்துக்குள் வாழ்வீர்களானால் உங்கள் சிந்தைக்குள் ஆலோசனை சம்பந்தமான கருத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கலாம். ஆலோசனை வழங்குவது என்பதை இவ்வாறு வரையறுக்கலாம்.

“பலவீனருக்கு” ஓர் ஒத்தாசை.

அது…’

அது மனநிலையை “பகுப்பாய்வு செய்வது” அவசியமானவர்களுக்கு.

ஆலோசனை வழங்குவது இந்த ஒரு காரியத்துக்காக மாத்திரமல்ல. தேர்ச்சிபெற்ற ஒருவருடன் ஏற்படுத்திக்கொள்கிற படிமுறை ஆலோசனை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு உதவியாக அமையும்.

 

தேர்ச்சிபெற்ற ஒருவருடன் ஏற்படுத்திக்கொள்கிற படிமுறை ஆலோசனை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு உதவியாக அமையும்.  

  • உங்கள் செயல்கள், உணர்வுகள் மற்றும் தொடர்புகளுக்கு ஒரு காட்சி கோணத்தை ஏற்படுத்துவதற்கு வழியை அது ஏற்படுத்தும்.
  • அது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் சிந்திக்கும் முறையை அறிந்து கொள்ளவும் வழிமுறைகளை முன்வைக்கிறது.  
  • அது பலமுறைகளில் சோர்வு, மன அழுத்தம், கோபத்தை கட்டுப்படுத்துகிறது.
  • அது சண்டை சச்சரவுகளுக்கு முகம்கொடுக்கும் போது, தொடர்பாடல் ஆற்றலை வளர்த்துகொள்ள உதவியாக இருக்கும்.
  • அது வேதனைகளுக்கு முகம்கொடுப்பதால் ஏற்படும் இழப்புகளுக்கூடாக செயல்பட்டு, உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற உதவியாக அமையும்.

பின்வரும் முறைகள் அதற்குள் அடங்கலாம் அடங்காமலும் இருக்கலாம். ஆலோசனை வழங்குவது என்பது திறமைகளை வளர்த்துக்கொள்ள, ஆலோசனை பெற்றுகொள்ளும் படிமுறை. என்று நீங்கள் சிந்திப்பீர்களேயானால், நீங்கள் பலவிடயங்களை இழக்கவேண்டி ஏற்படும்.

அப்படியென்றால் லோசனை வழங்குதல் என்றால் என்ன?

அழைப்பு

அன்புள்ளசகோதர சகோதரிகளுக்கு,
 
அஸ்ஸலாமுஅலைக்கும்.
 
ஏகஇறைவன்எம்மீதுஒருபெரிதானகடமையைசுமத்தியுள்ளான். அதாவதுஏகஇறைவனிடம்சென்றடையும்வழியைஎமதுசமுதாயத்திற்குகாண்பிப்பதாகும். இதுமிகவும்சவால்மிக்ககடமையாகஇருந்தாலும், சத்தியத்தைதேடுவதில்உங்களைப்போல்ஆர்வமுள்ளவர்களுடன்பகிர்ந்துகொள்வதுமிகவும்இலகுவானகாரியமாகும்.
 
இன்ஜில்வேதத்தில்இவ்வாறுஒருகதைஉள்ளது. “ஒருமேய்ப்பன்இருந்தான். அவனிடம் 100 ஆடுகள்இருந்தது. ஒருநாள்அதில்ஒன்றுகானாமற்போய்விட்டது. அந்தமேய்ப்பனோமிகவும்கவலைக்கொண்டவனாய், 99 ஆடுகளையும்விட்டுவிட்டு, கானாமற்போனஒருஆட்டைதேடிக்கொண்டுசென்றான். அவன்அதைதேடிப்பிடித்ததும்மிகவும்சந்தோஷத்தோடுகூடஅந்தஆட்டைதோளில்போட்டுக்கொண்டு, தன்இருப்பிடம்நாடிவந்தான்.” இவ்வாறுதான்இறைவனும்தான்படைத்தமனிதன்வழிவிலகிச்செல்லும்போது, அவனைத்தேடிக்கண்டுபிடித்துதனதுஜமாஅத்துக்குள்சேர்த்துக்கொள்கிறான். இதைத்தான்எமக்கூடாகவும்இறைவன்செய்கிறான். பலவருடங்களின்பின்னரும்உங்களைத்தேடுகிறான்என்றால்பாருங்களேன்!.
 
மேலும்சத்தியத்தைதேடும்பணியில்தொடர்ந்தும்நாங்கள்ஈடுபடுவோம். உங்கள்கேள்விகள்சந்தேகங்களைஎங்களுக்குஎழுதுங்கள். பதில்எழுதஆயத்தமாகஉள்ளோம். “இறைவா, எங்களுக்குநேரானவழியைகாட்டுவாயாகஎன்றதுஆஎப்பொழுதும்எங்கள்உதடுகளில்ஒலிக்கட்டும்.
 
எங்கள்ஆக்கங்களைஇங்கே பதிவு செய்கிறோம். வாசித்துஉங்கள்விமர்சனங்களைஎங்களுக்குஎழுதுங்கள்.
 
 
இப்படிக்குஉங்கள்நண்பன்
 
           இறைநேசன்