இறைவேதம் என்றால் என்ன? பகுதி 2

 
விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  2
 
புனிதவேதாகமம் (2)
 
(புனிதஇறைவேதம்ஒருநூலகம்: புதியஏற்பாடு)
       
 1. சரித்திரநூல்கள்:
 
·         மத்தேயுஇவர் ஈஸா அல் மஸீஹ் அவர்களின் பன்னிரெண்டு ஹவாரியூன்களில் (சீஷர்களில்) ஒருவராவார். இவா் தனது நூலை யகூதிகளுக்கு எழுதினா். பழைய ஏற்பாட்டின் முன் கூறுதலின்படி ஈஸா தான் நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அந்த மஸீஹ் என்றஉண்மையை தன் நற்செய்தி நூலின்மூலம் அவர்களுக்குத் தெளிவுப்படுத்தினார்.
 
·         மாற்கு இவா் ஈசாவின் பன்னிரெண்டுஹவாரியூன்களில் ஒருவரான பித்ரூஸ் இன்ஹவாரியூன் ஆவார். இவர் ஈசாவைப்பற்றியகாரியங்களை ஒரு திரட்டாய் திரட்டி, ஒழுங்குப்படுத்தி அன்றைய காலத்தில் ஆட்சியில்இருந்த ரோமர்களுக்கு நற்செய்தியாக எழுதினார்.
 
·         லூக்காஇவர் ஒரு வைத்தியன். இவர்அன்றைய காலத்தில் ஈசாவைப்பற்றி இருந்த எல்லா ஆதாரப்பூர்வமானகண்கண்ட சாட்சிகளிடமிருந்து தகவல்களைப் பெற்று அவற்றை அன்றையஉலகில் பேரரசாக இருந்த ரோமபேரரசின் ஒரு அதிகரியாக இருந்ததெயோபிலுஸ் என்பவருக்கு நற்செய்தியாக எழுதினார்
 
·         யோவான் (யூஹன்னா) இவர்  ஈஸாவின்ஓர்  ஹவாரியூன்ஆவார். இவருடைய புத்தகம் கடைசியாகவேஎழுதப்பட்டது. அது ஈஸா அல் மஸீஹின் ஆள்தன்மையையும் அவருடைய செய்தியையும் வலியுறுத்துகின்றது.
 
·         ரசூல்மார்களின்நடபடிகள்–  இதுநற்செய்தி எழுதிய லூக்காவாலேயே எழுதப்பட்டது. இப்புத்தகத்தில் இவர் ஈஸா அல் மஸீஹ் சுவர்க்கத்திற்கு ஏறிச்சென்றதையும், ரூஹூல் குதுஸின்வருகையையும், நற்செய்தியானது மத்தியத்தரைக்கடலை சுற்றிலுமிருக்கும் தேசங்களுக்கு பரம்புவதையும் ரோமின் நீரோ மன்னன்ஈஸாவை ஈமான் கொண்டவர்களை உபத்திரவப்படுத்தியஉபத்திரவத்திற்கு சற்று முந்திய காலம்வரையுள்ள வரலாற்றையும் உள்ளடக்கியுள்ளது.
 
2.            போதனைநிருபங்கள் (கடிதங்கள்) இவை ஈசாவின் வார்த்தைகளின்அடிப்படையில் சபைகளுக்கு ஆலோசனையாக எழுதப்பட்டவையாகும். ஈசா சரீரப்பிரகாரமாக இந்தபூமியில் ஜீவிக்கும்போது அவருடைய ஹவாரியூன்களை நோக்கி, ‘நான் உங்களுக்கு அநேக காரியங்களை சொல்லவேண்டியிருக்கின்றது, அவற்றை இப்பொழுது நீங்கள்தாங்க மாட்டீர்கள். சத்திய ஆவியாகிய ரூஹூல்குத்துஸ்ஸானவர் வரும்பொழுது அவர் உங்களை சகலசத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார்” (யோவான் 16:12-13) ‘என் நாமத்தினாலே பிதாவானவர்அனுப்பும் சத்திய ஆவியாகிய ரூஹூல்குத்துஸ்ஸான ஆலோசகர் உங்களண்டை வரும்பொழுது அவர் உங்களுக்கு எல்லாவற்றையும்கற்றுக்கொடுத்து நான் உங்களுக்கு சொன்னஎல்லாவற்றையும் திரும்பவும் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார்” (யோவான் 14:26).
 
கடித வழிகாட்டிகள், போதனைஇறைவாக்குரைத்தல் (தீர்க்கதரிசனம்) என்பவைகள்கூட ரூஹூல் குத்துஸானவரின் அகத்தூண்டுதலின்கீழேயே எழுதப்பட்டது. இந்த நிருபங்கள் நற்செய்திநூல்களை விபரிக்கின்றதாகவும், அவைகளுக்கு ஒரு பிற்சேர்க்கையாகவும் இருப்பதோடுசபைகளுக்கு அறிவுறுத்தல்களையும், சபைகளை உற்சாகப்படுத்தும்படியும் எழுதப்பட்டது. இவைகள்ஈஸா அல் மஸீஹின் ரசூல்மார்களாகியயூவன்னா, பித்ரூஸ், யாக்கூப், யூதா, பவுல். என்பவர்களால்எழுதப்பட்டது. பவுலின் சில நிருபங்கள்சபையின் சில தனி நபர்களுக்குஎழுதப்பட்டது. சில நிருபங்கள் பொதுவாகசபைகளுக்கு எழுதப்பட்டது. இந்த போதனை நிருபங்கள்பின்வருமாறு:
 
·         ரோமர்
·         1,2 கொரிந்தியர்
·         கலாத்தியர்
·         எபேசியர்
·         பிலிப்பியர்
·         கொலோசெயர்
·         1,2தெசலோனிக்கேயர்
·         1,2தீமோத்தேயு
·         தீத்து
·         பிலேமோன்
·         எபிரேயர்
·         யாக்கோபு
·         1,2பேதுரு
·         1,2.3யோவான்
·         யூதா
 
 
3.    இறைவாக்குரைபுத்தகம். இது புனித வேதாகமத்தின் கடைசிபுத்தகமாகிய வெளிப்படுத்தல் புத்தகமாகும். இது ஈஸா அல் மஸீஹின் ஹவாரியூனான யூவன்னாவினால் எழுதப்பட்டதாகும். இந்த புத்தகம் உலக சரித்திரத்தையும் அந்தகாலத்திலிருந்து கியாமத்து நாள் வரையும் உள்ளகாலத்தில் ஜமாத்தின் நிலைபற்றியும், அதேபோல் இறைவனுடைய நித்தியநோக்கம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பதையும்விஸ்தரிக்கின்றது.
 
 
பின்வரும்கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.
1            புதியஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உள்ளது?
2             புதியஏற்பாட்டின் மூன்று பெரும் பிரிவுகள்என்ன?
3             புதியஏற்பாட்டின் சரித்திர புத்தகங்களின் பகுதியிலுள்ள நான்கு      புத்தககங்களின் பெயர்களைத்எழுதுக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *